முகப்பு Bengaluru கிழக்கு பெங்களூருவில் மூன்று பிரம்மாண்ட ஊர்வலங்களுடன் இஸ்கான் வைட்ஃபீல்டின் 60-வது ஜெகன்னாதர் ரத யாத்திரை கொண்டாட்டம்

கிழக்கு பெங்களூருவில் மூன்று பிரம்மாண்ட ஊர்வலங்களுடன் இஸ்கான் வைட்ஃபீல்டின் 60-வது ஜெகன்னாதர் ரத யாத்திரை கொண்டாட்டம்

கன்னமங்கலா, கக்கதாசாபுரா மற்றும் வைட்ஃபீல்ட் ஆகிய இடங்களில் 5,075 பேருக்கு புனிதமான பிரசாத உணவு வழங்கப்பட்ட நிலையில், ஆயிரக்கணக்கானோர் இதில் பங்கேற்றனர்

7
0

பெங்களூரு, ஜூலை 20: பக்தி, கலாசாரம் மற்றும் சமூக சேவையை முன்னிறுத்தி, கிழக்கு பெங்களூரு முழுவதும் கன்னமங்கலா (ஜூலை 16), கக்கதாசாபுரா (ஜூலை 18) மற்றும் வைட்ஃபீல்ட் (ஜூலை 19) ஆகிய இடங்களில் மூன்று பிரம்மாண்ட ரத யாத்திரைகளை நடத்தியதன் மூலம், இஸ்கான் வைட்ஃபீல்ட் தனது 60-வது ஜெகன்னாதர் ரத யாத்திரை கொண்டாட்டங்களை வெற்றிகரமாக நிறைவு செய்தது.

இஸ்கானின் ஜெகன்னாதர் ரத யாத்திரை மரபின் 60-வது ஆண்டைக் குறிக்கும் வகையில், இத்திருவிழா தொடர்ந்து பகவான் ஜெகன்னாதர், பாலதேவர் மற்றும் தேவி சுபத்ரா ஆகியோரை கோயிலுக்கு வெளியே கொண்டு வந்து, அனைத்துத் தரப்பு மக்களையும் அவர்களின் அருளைப் பெற அழைக்கும் பாரம்பரியத்தைத் தொடர்ந்தது.

ரத யாத்திரை என்பது கருணை, அனைவரையும் உள்ளடக்கிய தன்மை மற்றும் ஆன்மீக ஒற்றுமை ஆகியவற்றின் அடையாளமாக, பகவான் ஜெகன்னாதர், பலதேவா மற்றும் தேவி சுபத்ரா ஆகியோருடன் ஊர்வலமாக வந்து அனைவருக்கும் தனது அருளை வழங்கும் வருடாந்திர விழாவாகும்.

கொண்டாட்டங்கள் கன்னமங்கலாவில் தொடங்கி, கக்கதாடாசாபுராவில் தொடர்ந்தன. இறுதியாக வைட்ஃபீல்டில் நடைபெற்ற முக்கிய ரத யாத்திரையுடன் நிறைவடைந்தன. வைட்ஃபீல்ட் ஊர்வலம் சித்தபுராவில் உள்ள ஆய் மாதாஜி கோயிலில் தொடங்கி வைட்ஃபீல்ட் இன்னர் சர்க்கிள் மைதானத்தில் நிறைவடைந்தது. அங்கு ஆயிரக்கணக்கானோர் ‘ஹரே கிருஷ்ணா’ மகா மந்திரத்தை முழங்கியபடியே அழகாக அலங்கரிக்கப்பட்ட தேர்களை இழுத்துச் சென்றனர்.

ஒவ்வொரு ரத யாத்திரையும் ஆன்மீக சொற்பொழிவுகள் (கதா), இனிமையான கீர்த்தனைகள், பக்தி மற்றும் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், ‘சப்பன் போக்’ (56 வகையான உணவுப் படைப்புகள்) மற்றும் பிரம்மாண்ட மகா ஆரத்தி ஆகியவற்றை உள்ளடக்கிய ஊக்கமளிக்கும் கலாசார நிகழ்ச்சிகளுடன் நிறைவடைந்தது.

மூன்று ரத யாத்திரைகளிலும் மொத்தம் 5,075 பேருக்கு புனிதமான பிரசாத உணவு வழங்கப்பட்டது. இது கிருஷ்ண பிரசாதம் மூலம் சமூகத்திற்குச் சேவை செய்வதிலும், கருணை, நல்லிணக்கம் மற்றும் பக்தி கலாசாரத்தை ஊக்குவிப்பதிலும் இஸ்கான் கொண்டுள்ள நீண்டகால அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியது.

நூற்றுக்கணக்கான தன்னார்வலர்கள் ஒருங்கிணைப்புப் பணிகள், கூட்ட நெரிசல் மேலாண்மை, கலாசார நிகழ்ச்சிகள் மற்றும் பிரசாத விநியோகம் ஆகியவற்றை மேற்கொண்டனர்; இதன் மூலம் மூன்று ரத யாத்திரைகளும் சுமூகமாகவும் வெற்றிகரமாகவும் நடைபெறுவதை உறுதி செய்தனர். இந்நிகழ்ச்சியில் பேசிய இஸ்கான் (ISKCON) வைட்ஃபீல்ட் அமைப்பின் பிரதிநிதி ஒருவர் கூறியதாவது:

“கீர்த்தனை, பக்தி மற்றும் தன்னலமற்ற சேவையில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றிணைந்து பங்கேற்றதைக் காண்பது மிகவும் ஊக்கமளிப்பதாக இருந்தது. பக்தி, கருணை மற்றும் ஆன்மீக ஒற்றுமை ஆகிய காலத்தால் அழியாத செய்திகளுடன் கிருஷ்ண பிரசாதத்தைப் பகிர்ந்து, 5,075 பேருக்குப் புனிதமான பிரசாத உணவை வழங்கியதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியும் நன்றியுணர்வும் கொள்கிறோம்.”

உலகம் முழுவதும் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் ஜெகன்னாதர் ரத யாத்திரை, உலகின் மிகப் பழமையான மற்றும் மிகவும் போற்றப்படும் ஆன்மீக விழாக்களில் ஒன்றாகும். இத்தகைய விழாக்களின் மூலம், பக்தி உணர்வை வளர்த்தல், இந்தியாவின் ஆன்மீக மற்றும் கலாசார பாரம்பரியத்தைப் பாதுகாத்தல், விழுமியங்கள் சார்ந்த வாழ்க்கையை ஊக்குவித்தல் மற்றும் இளைஞர் நலன் சார்ந்த முன்னெடுப்புகள், சமூக நலப் பணிகள், கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் பிரசாத விநியோகம் ஆகியவற்றின் வாயிலாகச் சமூகத்திற்குச் சேவையாற்றுதல் ஆகிய தனது நோக்கத்தை இஸ்கான் வைட்ஃபீல்ட் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.

மூன்று ரத யாத்திரைகளும் வெற்றிகரமாக நிறைவடைந்தது, பக்தர்கள், தன்னார்வலர்கள், அரசு அதிகாரிகள், பெங்களூரு காவல்துறை, பிபிஎம்பி, பக்த‌ர்கள், ஊடகத்தினர் மற்றும் கன்ன‌மங்கலா, கக்கதாசாபுரா மற்றும் வைட்ஃபீல்ட் ஆகிய உள்ளூர் சமூகத்தினரிடையே நிலவிய கூட்டுறவின் உணர்வை வெளிப்படுத்தியது. அத்துடன், பக்தி, கலாசாரம் மற்றும் கருணைமிக்க சமூகச் சேவையின் மூலம் சமுதாயத்திற்குப் பணியாற்றுவதில் இஸ்கான் வைட்ஃபீல்ட் கொண்டுள்ள உறுதிப்பாட்டை இது மீண்டும் உறுதிப்படுத்தியது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்