மருத்துவர்களையும் செயற்கை நுண்ணறிவு நிபுணர்களையும் ஒன்றிணைக்கும் இந்தியாவின் முதல் பிரத்யேக சுகாதார செயற்கை நுண்ணறிவு மாநாடு
பெங்களூரு, ஜூலை 10: சுகாதாரம் மற்றும் செயற்கை நுண்ணறிவுக்காக (AI) பிரத்தியேகமாக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு தேசிய தளமான எச்ஏஐ மாநாடு 2026-இன் முதல் பதிப்பு இன்று தொடங்கி வைக்கப்பட்டது. குளோபல் ஹெல்த்கேர் அகாடமியால் நடத்தப்பட்ட இந்த மாநாடு, பாதுகாப்பு, நெறிமுறைகள் மற்றும் மருத்துவத் தீர்ப்புகளைப் பாதுகாக்கும் அதே வேளையில், செயற்கை நுண்ணறிவு எவ்வாறு நோயாளி பராமரிப்பை மேம்படுத்த முடியும் என்பதை ஆராய்வதற்காக மருத்துவர்கள், செயற்கை நுண்ணறிவு விஞ்ஞானிகள், மருத்துவமனைத் தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களை ஒன்றிணைத்தது. “எதிர்காலத்திற்குத்...
கர்நாடக பறையர் சங்கம் சார்பில் இரட்டைமலை சீனிவாசனின் பிறந்தநாள் விழா
பெங்களூர், ஜூலை 9: பெங்களூர் கலாசிபாளையத்தில் செவ்வாய்க்கிழமை கர்நாடக பறையர் சங்கத்தின் தலைவர் வேடி என்கிற பாட்ஷா தலைமையில் இரட்டைமலை சீனிவாசனின் 167 வது பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பெங்களூர் கலாசி பாளையத்தைச் சேர்ந்த பி வேடி என்கிற பாட்ஷா தலைமையில் கர்நாடக பறையர் சங்கம் அண்மையில் தொடங்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ஜூலை ஏழாம் தேதி செவ்வாய்க்கிழமை இரட்டைமலை சீனிவாசனின் 167வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் இரட்டைமலை சீனிவாசனின் உருவப்படம் திறந்து வைக்கப்பட்டது. கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்பும், உணவும் வழங்கப்பட்டது. விழாவில் பேசிய...
உலக சாக்லேட் தினத்தை முன்னிட்டு, பெங்களூரு ஐஐஎச்எம்மின் விருந்தோம்பல் துறை மாணவர்கள் ‘சாக்லேட் கலையில் தேர்ச்சி பெறுதல்’ என்ற அனுபவத்தைப் பெற்றனர்
பெங்களூரு, ஜூலை 7: சாக்லேட் என்பது ஒரு இனிப்பு விருந்தை விட மேலானது - அது ஒரு உணர்வு, ஒரு கைவினை, ஒரு அறிவியல் மற்றும் படைப்பாற்றலின் மொழி. இந்த உணர்வைக் கொண்டாடும் விதமாக, பெங்களூருவில் உள்ள சர்வதேச ஹோட்டல் மேலாண்மை நிறுவனம் (IIHM) மற்றும் அதன் துணை நிறுவனமான சர்வதேச பேஸ்ட்ரி மற்றும் சமையல் கலை நிறுவனம் (IIPC) ஆகியவற்றின் விருந்தோம்பல் துறை மாணவர்கள், உலக சாக்லேட் தினத்தை முன்னிட்டு 'சாக்லேட் கலையில் தேர்ச்சி பெறுதல் - கொட்டையிலிருந்து பார் வரை'...
தனது 49வது ஆண்டுப் பொதுக் கூட்டத்தில், தேசத்தை உருவாக்கிய நான்கு தலைசிறந்த ஆளுமைகளை பெங்களூரு தொழில் மற்றும் வர்த்தக சபை (BCIC) கௌரவிப்பு
பெங்களூரு, ஜூலை 7: பெங்களூரு தொழில் மற்றும் வர்த்தக சபை (BCIC), சனிக்கிழமையன்று பெங்களூருவில் நடைபெற்ற தனது 49வது ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் (AGM), அறிவியல், பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் வேளாண்மை ஆகிய துறைகளை வளப்படுத்திய நான்கு தலைசிறந்த ஆளுமைகளைக் கௌரவித்து, தனது பொன்விழா ஆண்டைத் தொடங்கியது. தேசத்திற்கும் சமூகத்திற்கும் அவர்கள் ஆற்றிய முன்மாதிரியான சேவையைப் பாராட்டி, பத்மஸ்ரீ டாக்டர் சுபா வெங்கடேஷ் ஐயங்கார், மேஜர் ஜெனரல் ஆர்.கே. சுரேஷ், எஸ்.சி. எஸ்.எம்., டாக்டர் பி.எஸ். ஸ்ரீநாத் மற்றும் பத்மஸ்ரீ டாக்டர் காதர்...
ஏழாவது உலகத் திருக்குறள் மாநாட்டை தொடக்கி வைத்தார் அறிவியல் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை
பெங்களூரு, ஜூலை 6: பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 5) ஏழாவது உலகத் திருக்குறள் மாநாட்டை அறிவியல் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தொடக்கி வைத்தார். பெங்களூரு புனித ஜோசப் பல்கலைக்கழகக் கழகத்தில் ஜூலை 5 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் ஏழாவது உலகத் திருக்குறள் மாநாட்டை இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை, குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தார். பெங்களூர் திருவள்ளுவர் சங்கம், புனிதர் ஜோசப் பல்கலைக்கழகம், மற்றும் தாய் மொழி கூட்டமைப்பு இணைந்து ஏழாவது உலகத் திருக்குறள் மாநாட்டை நடத்தின. பெங்களூர்...
ஓப்போ இந்தியா, ஏஐ போர்ட்ரெய்ட் கேமரா மற்றும் ஏஐ ரீமிக்ஸ் கொலாஜ் அம்சங்களைக் கொண்ட ரெனோ16 சீரிஸ் மூலம் கிரியேட்டிவ் போட்டோகிராஃபியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறது
பெங்களூரு, ஜூலை 6: ஓப்போ இந்தியா இன்று ரெனோ16 சீரிஸை அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது. இதில் ரெனோ16 மற்றும் ரெனோ16சி ஆகியவை அடங்கும். இவை இந்தியாவின் முதல் ஹோலோவெர்ஸ் 3D டிசைன், 50எம்பி 3.5× டெலிஃபோட்டோ லென்ஸுடன் கூடிய ஏஐ போர்ட்ரெய்ட் கேமரா, நேச்சுரல் டோன் இமேஜிங் மற்றும் ஆல்-ஃபோக்கல்-லென்த் 4கே 60ஃஎப்பிஎஸ் எச்டிஆர் வீடியோ ரெக்கார்டிங் ஆகிய அம்சங்களைக் கொண்டுள்ளன. ஸ்மார்ட்போனை வெறும் தகவல் தொடர்பு சாதனமாக மட்டும் பார்க்காமல், அதற்கு மேலாகப் பார்க்கும் இளம் பயனர்களுக்காக வடிவமைக்கப்பட்ட ரெனோ16 சீரிஸ், கேமரா,...
ராமசாமிபாளையம் ஸ்ரீதேவி கருமாரியம்மன் ஆலய அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம்
பெங்களூரு, ஜூலை 6: பெங்களூரு இராமசாமிபாளையத்தில் உள்ள ஸ்ரீதேவி கருமாரியம்மன் ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 5) அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. பெங்களூரு ராமசாமிபாளையம் (ஆர்.எஸ்.பாளையா) வீரபத்ரப்பா சாலையில் அமைந்துள்ள ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோயில் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து ஆலய புனரமைப்பு மற்றும் அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் ஜூலை 3 முதல் 5ம் தேதி வரை நடத்த ஆலய அறக் கட்டளை முடிவு செய்தது. அதன்படி கடந்த 3ம் தேதி மகா கும்பாபிஷேக விழா தொடங்கியது. முதல் நாளில் கணபதி ஹோமம் லட்சுமி ஹோமம்,...
ராணி சரளாதேவி பள்ளியில் குழந்தைகளுக்குக் கல்வி உபகரணத் தொகுப்புகள்
பெங்களூரு, ஜூலை 4: பெங்களூரு ஜெயநகரில் உள்ள மைசூர் வங்கி ஊழியர்கள் கல்விச் சங்கத்தால் (Mysore Bank Employees’ Education Society) நடத்தப்படும் ராணி சரளாதேவி கல்வி நிறுவனங்களில், உள்ளூர் ரோட்டரி பிரைம் கிளப்புடன் (Rotary Prime Club) இணைந்து, 400-க்கும் மேற்பட்ட தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் மற்றும் பள்ளிப் பைகள் அடங்கிய 'கல்வி உபகரணத் தொகுப்புகள்' (Literacy Kits) வெள்ளிக்கிழமை (ஜூலை 3) வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் பெங்களூரு...
பெங்களூரில் ஜூலை 5ல் ஏழாவது உலகத் திருக்குறள் மாநாடு: அறிவியல் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பங்கேற்பு
பெங்களூரு, ஜூலை 4: பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 5) ஏழாவது உலகத் திருக்குறள் மாநாட்டை அறிவியல் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தொடக்கி வைக்க உள்ளார். பெங்களூரு புனித ஜோசப் பல்கலைக்கழகக் கழகத்தில் ஜூலை 5 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஏழாவது உலகத் திருக்குறள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் இஸ்ரோ முன்னாள்ள் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை பங்கேற்று, மாநாட்டை தொடக்கி வைக்க உள்ளார். பெங்களூர் திருவள்ளுவர் சங்கம், புனிதர் ஜோசப் பல்கலைக்கழகம், மற்றும் தாய் மொழி கூட்டமைப்பு இணைந்து ஜூலை 5 ஆம்...
ஜூலை 5ல் பெங்களூருவில் 7-வது உலக திருக்குறள் மாநாடு: தமிழக அமைச்சர் தென்னரசு பங்கேற்பு
பெங்களூரு, ஜூலை 2: பெங்களூருவில் உள்ள புனிதர் ஜோசப் பல்கலைக் கழகத்தில் வரும் 5ம் தேதி 7-வது உலக திருக்குறள் மாநாடு நடைபெற உள்ளது. பெங்களூரு புனிதர் ஜோசப் பல்கலைக்கழகம், தாய் மொழி கூட்டமைப்பு மற்றும் திருவள்ளுவர் சங்கம் இணைந்து ஜூலை 5 ஆம் தேதி 7-வது உலக திருக்குறள் மாநாட்டை நடத்துகிறது. புனிதர் ஜோசப் பல்கலைக் கழகத்தில் நடைபெறும் இந்த மாநாட்டை தமிழக அயலகத் தமிழர் நலத்துறை அமைச்சர் தென்னரசு தொடங்கி வைக்கிறார். இம்மாநாட்டில் இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை, கர்நாடக...


































































