மத்திகேரேயில் தனது மூன்றாவது முதியோர் பராமரிப்பு மையத்தைத் தொடங்கியதன் மூலம், பெங்களூருவின் மிகப்பெரிய உதவி வாழ்வு வழங்குநராக உருவெடுத்துள்ள அதுல்யா சீனியர் கேர்
பெங்களூரு, ஆக. 9: இந்தியாவின் மிகப்பெரிய உதவி வாழ்வு வழங்குநரான அதுல்யா சீனியர் கேர், இன்று பெங்களூரு, மத்திகேரேயில் தனது மூன்றாவது ஒருங்கிணைந்த முதியோர் பராமரிப்பு மையத்தைத் திறந்து வைத்துள்ளது. இதன் மூலம், நகரில் மூத்த குடிமக்களுக்கான விரிவான சுகாதார சேவைகளுக்கான அணுகலை மேலும் விரிவுபடுத்தியுள்ளது. பெங்களூரு முழுவதும் 300-க்கும் மேற்பட்ட பிரத்யேக முதியோர் பராமரிப்பு படுக்கைகளுடன், அதுல்யா இப்போது நகரின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த முதியோர் பராமரிப்பு வழங்குநராகத் திகழ்கிறது. இந்த மையத்தை, கர்நாடக அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர்...
ஆடி தள்ளுபடி மற்றும் வரமஹாலட்சுமி பண்டிகையை முன்னிட்டு கோ-ஆப்டெக்ஸில் ‘2 வாங்கினால் ஒன்று இலவசம்’ சிறப்பு விற்பனை
பெங்களூரு, ஆக. 8: ஆடி தள்ளுபடி மற்றும் வரமஹாலட்சுமி பண்டிகையை முன்னிட்டு, கோ-ஆப்டெக்ஸில் ‘2 வாங்கினால் ஒன்று இலவசம்’ என்ற சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா அண்மையில் பெங்களூரு பசவனகுடியில் அமைந்துள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கல்லூரி பேராசிரியர்கள் நாகரத்னா, கீதா, கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் மண்டல துணை மேலாளர் பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி சிறப்பு விற்பனையைத் தொடங்கி வைத்தனர். தொடர்ந்து, சிறப்பு விருந்தினர்கள் வாடிக்கையாளர்களுக்கு முதல் விற்பனையை...
பெங்களூருவில் உள்ள பன்ஷங்கரி (கத்ரேகுப்பா சிக்னல்) பகுதியில் கலாமந்திரின் 8வது ஷோரூம் திறப்பு
பெங்களூரு, ஆக. 8: கர்நாடகாவில் தனது தடத்தை வலுப்படுத்தும் விதமாக, அம்மாநிலத்தின் மிகவும் நம்பகமான குடும்ப ஃபேஷன் மையங்களில் ஒன்றான கலாமந்திர், பெங்களூரு, பன்ஷங்கரி (கத்ரேகுப்பா சிக்னல்) பகுதியில் தனது புத்தம் புதிய ஷோரூமைத் திறந்து வைத்துள்ளது. இந்த பிரம்மாண்டமான தொடக்க விழாவில் பிரபல நடிகை ரச்சிதா ராம் கலந்துகொண்டு சிறப்பித்தார். இது, இந்த பிராண்டின் விரிவாக்கப் பயணத்தில் மற்றொரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது. இந்த புதிய ஷோரூம், பெங்களூருவில் கலாமந்திரின் 8வது விற்பனை நிலையமாகும். இது, நகரம் முழுவதும் உள்ள குடும்பங்களுக்கு தரமான...
கர்நாடக ரஜ்புத் சமாஜ் மற்றும் பெங்களூர் மாவட்டத்தினர் அமைச்சர் அஜய்சிங்கிற்கு வாழ்த்து
பெங்களூரு, ஆக. 4: கர்நாடக ரஜ்புத் சமாஜ் மற்றும் பெங்களூர் மாவட்டத்தினர் புதிதாக பதவி ஏற்ற அமைச்சர் அஜய்சிங்கிற்கு வாழ்த்து தெரிவித்தனர். அண்மையில் கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. அதில் புதிய அமைச்சராக அஜய்சிங் பதவி ஏற்றார். அவரை, அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை, கர்நாடக ரஜ்புத் சமாஜ் மற்றும் பெங்களூர் மாவட்ட தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் சந்தித்த வாழ்த்து தெரிவித்தனர். குழுவில், கர்நாடக ரஜ்புத் சமாஜ் மற்றும் பெங்களூர் மாவட்டத்தின் தலைவர் அஜித்சிங், பொதுச் செயலாளர் பாலாஜிசிங் ஆர். (வழக்கறிஞர்), துணைத் தலைவர் டி.ஆர்.பாலாஜிசிங், நிர்வாகக்...
திருவள்ளுவர் சிலை திறப்பு தினம்: சிறப்பாக கொண்டாட அனைவரும் ஓர் அணியாக திரள வேண்டும்-பையப்பனஹள்ளி டாக்டர் டி.ரமேஷ்
பெங்களூரு, ஆக. 3: பெங்களூரு அல்சூர் ஏரிக்கரையில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை திறப்பு தினமான ஆக. 9 ஆம் தேதி, அனைவரும் ஓர் அணியாக திரண்டு சிறப்பாக கொண்டாட என்று விஸ்வகவி திருவள்ளுவர் சங்கத்தின் தலைவர் பையப்பனஹள்ளி டாக்டர் டி.ரமேஷ் தெரிவித்தார். பெங்களூரு அல்சூர் ஏரிக்கரையில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைத்த தினமான ஆக. 9 ஆம் தேதியன்று, சிலைக்கு மாலை அணிவித்து கொண்டாடுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 2) மாலை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய பைப்பனஹள்ளி டாக்டர் டி.ரமேஷ்,...
திருக்குறள் மறுமலர்ச்சி மாநாட்டில் பெண்களின் நன்மதிப்பு அடைமொழி ‘ஐயை’ சொல்லுக்கு வரவேற்பு
விருதுநகர், ஆக. 3: விருதுநகர் அருப்புக்கோட்டை சாலையில் உள்ள வி. வி. சண்முகம்- வள்ளியம்மை நினைவுத் திருமண மண்டபத்தில், உலக திருக்குறள் கூட்டமைப்பு மற்றும் விருதுநகர் குறள் நெறிக் கழகம் நடத்திய திருக்குறள் மறுமலர்ச்சி மாநாட்டில் உலக திருக்குறள் கூட்டமைப்பு தலைவர் மு.ஞானமூர்த்தி தலைமையில் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன். வி.ஜி.பி.உலக தமிழ் சங்கத்தின் நிறுவனர் வி.ஜி.சந்தோஷம் உள்ளிட்ட ஏராளமான தமிழ் அறிஞர்கள், தமிழ்ச் சான்றோர்கள், கவிஞர்கள் கலந்து கொண்டனர். மாநாடு பதிமூன்று நிகழ்வுகளாக நடைப்பெற்றது. திருக்குறளை முன்னிலைப் படுத்தி பல...
பெங்களூரில் ‘வாசன் ஐ கேர் மருத்துவமனை’யின் “ரெட்டினா பிங்க் டே” (Retina Pink Day) – மூன்று நாள் விழித்திரை விழிப்புணர்வு முகாம்
பெங்களூரு, ஜூலை 28: பெங்களூரில் உள்ள வாசன் ஐ கேர் மருத்துவமனை, தனது மாரத்தஹள்ளி மற்றும் எச்.எஸ்.ஆர் லேஅவுட் கிளைகளில் 2026 ஆகஸ்ட் 8, 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் (சனிக்கிழமை, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை) "ரெட்டினா பிங்க் டே" (Retina Pink Day) என்ற சிறப்பு விழித்திரை விழிப்புணர்வு முகாமை ஏற்பாடு செய்துள்ளது. இந்த மூன்று நாள் முகாம், விழித்திரை நோய்கள் குறித்தும், குறிப்பாகத் தடுக்கக்கூடிய பார்வையிழப்புக்கு முக்கிய காரணங்களில் ஒன்றான 'டயாபெட்டிக் ரெட்டினோபதி' (நீரிழிவு விழித்திரை பாதிப்பு) குறித்தும் விழிப்புணர்வை...
மாணவர்கள் வாழ்நாள் முழுவதும் கற்கும் ஆர்வத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்: சௌமியா ரெட்டி
பெங்களூரு: "மாணவர்கள் பட்டம் பெற்ற பிறகு கற்பதை நிறுத்தக்கூடாது. கற்றல் என்பது ஒரு தொடர்ச்சியான செயல்முறை, மேலும் அவர்கள் புதிய அறிவைப் பெறுவதில் ஆர்வத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்" என்று கர்நாடக பிரதேச மகளிர் காங்கிரஸின் தலைவர் சௌமியா ரெட்டி கூறினார். ஜெயநகரில் உள்ள சிட்டி கல்லூரி ஏற்பாடு செய்திருந்த பட்டமளிப்பு விழாவைத் தொடங்கி வைத்துப் பேசிய அவர், "நீங்கள் அனைவரும் இன்று உங்கள் பட்டங்களைப் பெற்றுள்ளீர்கள். ஆனால் உங்கள் கல்வி இத்துடன் முடிந்துவிட்டது என்று நினைக்கக்கூடாது. உங்களில் சிலர் உயர் படிப்பைத் தொடரலாம்,...
தமிழ் இருக்கை குறித்து ஆய்வு
பெங்களூரு, ஜூலை 25: புனித ஜோசப் பல்கலைக் கழகத்தில், பெங்களூரு திருவள்ளுவர் சங்கத்தின் தலைவரும், தாய்மொழி கூட்டமைப்பின் தலைவருமான முனைவர் எஸ்.டி.குமார் தலைமையில் தமிழ் இருக்கை அமைப்பது குறித்து ஆய்வுச் செய்யப்பட்டது. பெங்களூரில் கடந்த ஜூலை 5 ஆம் தேதி புனிதர் ஜோசப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அரங்கத்தில் ஏழாவது உலக திருக்குறள் மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் அறிவிக்கப்பட்ட தீர்மானத்தின்படி புனித ஜோசப் பல்கலைக் கழகத்தில், தமிழ் இருக்கை அமைப்பது குறித்து ஆய்வுச் செய்யப்பட்டது. அப்போது மாநாட்டை முன் நின்று சிறப்பாக நடத்தியதற்காக தாய்மொழிக் கூட்டமைப்பு...
புற்றுநோய் அல்லாத தைராய்டு கட்டிக்கு, க்ளென்ஈகிள்ஸ் பிஜிஎஸ் மருத்துவமனை முதல் முறையாக அறுவை சிகிச்சையற்ற சிகிச்சையை நிகழ்த்தி சாதனை
பெங்களூரு, ஜூலை 24: பெங்களூரு, கெங்கேரியில் உள்ள க்ளென்ஈகிள்ஸ் பிஜிஎஸ் மருத்துவமனை (ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் நெட்வொர்க்கின் ஒரு பகுதி), 41 வயதுப் பெண்ணுக்கு இருந்த அதிக இரத்த நாளங்கள் கொண்ட தீங்கற்ற தைராய்டு கட்டிக்கு சிகிச்சை அளிக்க, தைராய்டு கட்டிக்கான இரத்த ஓட்டத்தைத் தடுக்கும் 'டைரக்ட் பஞ்சர் எம்போலைசேஷன்' (Direct Puncture Embolisation) முறையையும், கட்டுப்படுத்தப்பட்ட வெப்பத்தைப் பயன்படுத்தி கட்டியை அழிக்கும் 'மைக்ரோவேவ் அப்லேஷன்' (Microwave Ablation) முறையையும் இணைத்து, முதல் முறையாக ஒரு சிகிச்சை முறையை நிகழ்த்தி, தைராய்டு சிகிச்சையில் ஒரு...



































































