பெங்களூரு, அக். 1: முன்னணி சிறு நிதி வங்கியான உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி, அதன் நிலையான வைப்புத் தொகைக்கான வட்டி விகிதத்தை 9 மாத காலத்துக்கு 7.5% ஆக உயர்த்துகிறது. வழக்கமான நிலையான வைப்பு விகிதங்களை விட மூத்த குடிமக்கள் 0.50% கூடுதலாகப் பெறுவார்கள்.
உஜ்ஜீவன் பொது வாடிக்கையாளர்களுக்கு 8.25% என்ற அதிகபட்ச வட்டி விகிதத்தை 12 மாத காலத்திற்கு வழங்குகிறது, அதே நேரத்தில் மூத்த குடிமக்கள் அதே காலத்திற்கு 8.75% கவர்ச்சிகரமான வட்டி விகிதத்தில் பயனடைகிறார்கள். வெளிநாடுகளில் உள்ள வாடிக்கையாளர்கள் உட்பட தனிநபர்கள் மற்றும் தனிநபர் அல்லாத வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் பிளாட்டினா நிலையான வைப்புத்தொகைக்கு 0.20% கூடுதல் வட்டி விகிதத்தை தொடர்ந்து பெறுவார்கள்.
உஜ்ஜீவன் எஸ்எப்பியின் நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான சஞ்சீவ் நௌடியல் கருத்துத் தெரிவிக்கையில், “குறுகிய காலக் காலத்திற்கு அதிக வட்டி விகிதத்தை எதிர்பார்க்கும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கான நிலையான வைப்புத் தொகை வட்டி விகிதங்களைத் திருத்தியமைப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நிலையான வைப்புத் தொகைகளில் சமீபத்திய விகித அதிகரிப்பு, டெர்ம் டெபாசிட்டுகளுக்கு அதிக வட்டி விகிதங்களை வழங்கும் வங்கிகளில் உஜ்ஜீவன் எஸ்எப்பிஐ தொடர்ந்து நிலைநிறுத்துகிறது.”
































































