முகப்பு Bengaluru ஜூலை 5ல் பெங்களூருவில் 7-வது உலக திருக்குறள் மாநாடு: தமிழக அமைச்சர் தென்னரசு பங்கேற்பு

ஜூலை 5ல் பெங்களூருவில் 7-வது உலக திருக்குறள் மாநாடு: தமிழக அமைச்சர் தென்னரசு பங்கேற்பு

42
0

பெங்களூரு, ஜூலை 2: பெங்​களூரு​வில் உள்ள புனிதர் ஜோசப் பல்கலைக்​ கழகத்​தில் வரும் 5ம் தேதி 7-வது உலக திருக்​குறள் மாநாடு நடை​பெற உள்​ளது.

பெங்களூரு புனிதர் ஜோசப் பல்​கலைக்​கழகம், தாய் மொழி கூட்டமைப்பு மற்​றும் திரு​வள்​ளுவர் சங்கம் இணைந்து ஜூலை 5 ஆம் தேதி 7-வது உலக திருக்​குறள் மாநாட்டை நடத்​துகிறது. புனிதர் ஜோசப் பல்​கலைக்​ கழகத்​தில் நடை​பெறும் இந்த மாநாட்டை த‌மிழக அயல​கத் தமிழர் நலத்துறை அமைச்​சர் தென்னரசு தொடங்கி வைக்​கிறார்.

இம்​மா​நாட்​டில் இஸ்ரோ முன்​னாள் திட்ட‌ இயக்​குனர் மயில்​சாமி அண்​ணாதுரை, கர்நாடக‌ ரக்ஷ‌ன வேதிகே அமைப்​பின் தலை​வர் நாராயணகவு​டா, செயிண்ட் ஜோசப் பல்​கலைக்​ கழகத்​தின் துணை வேந்​தர் விக்​டர் லோபோ உள்​ளிட்​டோர் பங்கேற்கின்றனர். 85க்கும் மேற்​பட்ட ஆய்​வாளர்​கள் திருக்குறள் தொடர்​பான தங்​களின் ஆய்​வுக் கட்​டுரைகளை சமர்ப்பிக்கின்றனர். மாநாட்டிற்கான ஏற்பாடுகளை பெங்களூரு திருவள்ளுவர் சங்கத்தின் தலைவரும், தாய் மொழி கூட்டமைப்பின் தலைவருமான‌ முனைவர் எஸ்.டி.குமார் செய்து வருகிறார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்