முகப்பு Bengaluru ராமையா தொழில்நுட்ப மையத்தின் சார்பில் 2 நாள் திட்டக் கண்காட்சி

ராமையா தொழில்நுட்ப மையத்தின் சார்பில் 2 நாள் திட்டக் கண்காட்சி

2
0

பெங்களூரு, ஜூன் 5: ராமையா தொழில்நுட்ப மையத்தின் சார்பில் ஜூன் 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் 2 நாள் திட்டக் கண்காட்சி நடைப்பெறுகிறது.

ராமையா தொழில்நுட்ப மையத்தின் இறுதி ஆண்டு மாணவர்களுக்காக பிரதர்ஷனா-2026 நிகழ்வு, ஜூன் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் (காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை) நடைபெறுகிறது.

இந்தத் திட்டக் கண்காட்சியானது, 1700 மாணவர்கள் தங்கள் கருத்தியல் யோசனைகளைத் தொழில்துறையின் முன்னணி முடிவெடுப்பவர்களிடம் எடுத்துரைக்க ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்கப்பட்டது. மாணவர்கள் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கான தங்கள் தொழில்நுட்ப அறிவையும், புதுமையான யோசனைகளையும் வெளிப்படுத்தினார்கள்.

இந்தத் தொழில்நுட்ப நிகழ்வில், 17 பொறியியல் துறைகளைச் சேர்ந்த இளங்கலை மாணவர்களின் வன்பொருள் மற்றும் மென்பொருள் திட்டங்கள் ஒரே கூரையின் கீழ் காட்சிப்படுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் மொத்தம் 446 திட்டங்கள் காட்சிப்படுத்தப்பட்டது.

இறுதியாண்டு மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த ஒரு மேடையை வழங்குவதும், அவர்களின் கடின உழைப்பைப் பாராட்டுவதும், இளைய தலைமுறையினரைச் சிறந்து விளங்க ஊக்குவிப்பதும் இந்த நிகழ்வின் முக்கிய நோக்கமாகும்.

ராமையா தொழில்நுட்ப மையத்தின் சிறந்த‌ முன்னாள் மாணவரும், குளோபல்ஸ் இன்க் நிறுவனத்தின் நிறுவனரும் தலைமைச் செயல் அதிகாரியுமான திரு. சுஹாஸ் கோபிநாத் அவர்கள் தலைமை விருந்தினராகவும், கோகுலா கல்வி அறக்கட்டளையின் கௌரவத் தலைவரும், சட்டசபை உறுப்பினரும், கர்நாடக அரசின் முன்னாள் அமைச்சருமான டாக்டர் எம். ஆர். சீதாராம், கோகுலா கல்வி அறக்கட்டளையின் கௌரவத் துணைத் தலைவர் திரு. எம். ஆர். ஜானகிராம், கௌரவச் செயலாளர் திரு. எம். ஆர். ஆனந்தராம்,

ராமையா தொழில்நுட்ப மையத்தின் கௌரவ இயக்குநர் திரு. எம். ஆர். சம்பங்கிராமையா, கௌரவ இயக்குநர் திரு. எம். ஆர். கோதண்டராம், கோகுலா கல்வி அறக்கட்டளையின் பொறியியல் மற்றும் பொது அறிவியல் துறைத் தலைவர் டாக்டர் பார்ஸ்வநாத் எச். வி, முதன்மை கல்வி ஆலோசகர் டாக்டர் கரிசித்தப்பா மற்றும் டாக்டர் என். வி. ஆர் ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

ராமையா தொழில்நுட்ப மையத்தின் முதல்வர் நாயுடு அவர்கள், வியாழக்கிழமை (ஜூன் 4) காலை 10.30 மணி அளவில் பெங்களூரு எம்.எஸ்.ஆர்.ஐ.டி அஞ்சல் நிலையம், எம்.எஸ்.ஆர்.ஐ.டி, நாற்கோண முற்றத் திடலில் திட்டக் கண்காட்சியைத் தொடக்கி வைத்தார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்