முகப்பு Bengaluru ஓபன் எலக்ட்ரிக் கர்நாடகாவில் பெரும் முதலீடு: புதிய ரோர் ஈவோ 30 சதம் விற்பனைக்கு இலக்கு

ஓபன் எலக்ட்ரிக் கர்நாடகாவில் பெரும் முதலீடு: புதிய ரோர் ஈவோ 30 சதம் விற்பனைக்கு இலக்கு

● கடந்த ஆண்டு ஓபன் எலக்ட்ரிக்கின் மொத்த விற்பனையில் 20%-க்கும் அதிகமான பங்களிப்பை கர்நாடகா வழங்கியது, இது நிறுவனத்தின் வலுவான வளர்ச்சி சந்தைகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. ● 2026 நிதியாண்டில் கர்நாடகாவின் அதிக விற்பனையாகும் மின்சார மோட்டார் சைக்கிள் பிராண்டாக ஓபன் எலக்ட்ரிக் உருவெடுத்தது. ● முதல் 10,000 வாடிக்கையாளர்களுக்கு ரோர் ஈவோ ₹99,999 என்ற சிறப்பு அறிமுக விலையில் கிடைக்கும்; முன்பதிவுகள் ₹777-இல் தொடங்குகின்றன, விநியோகம் ஜூன் 2026 முதல் தொடங்கும்.

4
0

பெங்களூரு, மே 14: இந்தியாவின் அதிவேகமாக வளர்ந்து வரும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை அடிப்படையாகக் கொண்ட மின்சார மோட்டார் சைக்கிள் உற்பத்தியாளரான ஓபன் எலக்ட்ரிக், இன்று பெங்களூரு, எச்எஸ்ஆர் லேஅவுட்டில் உள்ள தனது முதன்மை ஷோரூமில், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ரோர் ஈவோவிற்கான பிரத்யேக அறிமுகக் காட்சியை நடத்தியது.

நிறுவனத்தின் விரிவாக்கத் திட்டத்தில் கர்நாடகாவின் முக்கியத்துவம் அதிகரித்து வருவதை வலுப்படுத்தும் வகையில், மின்சார வாகனங்களின் பயன்பாட்டு வேகம், தங்களது மோட்டார் சைக்கிள்களுக்கான தேவை அதிகரிப்பு, மற்றும் நடைமுறைக்கு ஏற்ற மின்சார வாகனப் பயன்பாட்டுத் தீர்வுகளுக்கான நுகர்வோர் விருப்பம் உயர்வு ஆகியவற்றால் உந்தப்பட்டு, 2026 நிதியாண்டில் நியூ ரோர் ஈவோவின் மொத்த விற்பனையில் கிட்டத்தட்ட 30 சதம் கர்நாடகாவிலிருந்து வரும் என எதிர்பார்ப்பதாக ஓபன் எலக்ட்ரிக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த நிதியாண்டில் ஓபன் எலக்ட்ரிக்கின் ஒட்டுமொத்த விற்பனையில் 20 சதத்திற்கும் அதிகமான பங்களிப்பை கர்நாடகா வழங்கியது. இது அந்நிறுவனத்தின் மிகச் சிறப்பாகச் செயல்படும் சந்தைகளில் ஒன்றாகத் திகழ்கிறது. அதே காலகட்டத்தில், கர்நாடகாவில் அதிக விற்பனையாகும் மின்சார மோட்டார் சைக்கிள் பிராண்டாகவும் இந்நிறுவனம் உருவெடுத்தது.

பிராந்திய அறிமுக விழாவில் பேசிய ஓபன் எலக்ட்ரிக் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி மதுமிதா அகர்வால், “விற்பனை கண்ணோட்டத்தில் மட்டுமல்லாமல், எங்களின் புத்தாக்கம் மற்றும் உற்பத்திச் சூழலமைப்பின் அடித்தளமாகவும், கர்நாடகா ஓபன் எலக்ட்ரிக் நிறுவனத்திற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சந்தைகளில் ஒன்றாகத் தொடர்ந்து இருந்து வருகிறது. எங்களின் வளர்ச்சிப் பயணத்தில் பெங்களூரு ஒரு முக்கியப் பங்காற்றியுள்ளது. புதிய ரோர் ஈவோ மூலம், வடிவமைப்பு, செயல்திறன், நடைமுறைப் பயன்பாடு மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றை ஒரே கவர்ச்சிகரமான தொகுப்பில் வழங்கும் ஒரு மோட்டார்சைக்கிளைத் தேடும் ஓட்டுநர்களுக்கான எங்கள் அர்ப்பணிப்பை நாங்கள் மேலும் வலுப்படுத்துகிறோம்” என்றார்.

ஸ்டைல், செயல்திறன் மற்றும் நடைமுறைப் பயன்பாடு ஆகியவற்றை ஒரே தொகுப்பில் தேடும் இன்றைய ஓட்டுநர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள புதிய ரோர் ஈவோ, பிரீமியம் மோட்டார்சைக்கிளின் பண்புகளை அன்றாடப் பயன்பாட்டுடன் ஒரு மலிவு விலையில் இணைக்கிறது.

இந்த மோட்டார்சைக்கிள், ஒரு துணிச்சலான ஸ்ட்ரீட்ஃபைட்டர்-ஈர்க்கப்பட்ட வடிவமைப்பைக் கொண்டுள்ளதுடன், மணிக்கு 110 கி.மீ. உச்ச வேகத்தையும், ஐடிசி-சான்றளிக்கப்பட்ட 180 கி.மீ. பயண வரம்பையும் வழங்குகிறது. இது 90 நிமிடங்களில் 0 முதல் 80% வரை வேகமாக சார்ஜ் செய்யும் வசதியை ஆதரிக்கிறது. மேலும், இது ஓபன் எலக்ட்ரிக்கின் அறிவார்ந்த பயண மேம்பாட்டுத் தொழில்நுட்பமான ஸ்மார்ட்ஐக்யூ-வை (SmartIQ) அறிமுகப்படுத்துகிறது. இது பயணத் திறனை மேம்படுத்தவும், பயண வரம்பை 15 சதம் வரை நீட்டிக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஓபன் எலக்ட்ரிக்கின் பிரத்யேக 9கேடபள்யூ மோட்டார் மற்றும் மேம்பட்ட 3.4 கேடபள்யூஎச்
எல்எப்பி பேட்டரி தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் ரோர் ஈவோ (Rorr EVO), இந்திய சாலை மற்றும் வானிலை நிலைகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது சிறந்த வெப்பத் தடுப்பு, மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு மற்றும் நீண்ட பேட்டரி ஆயுளை வழங்குகிறது. இந்த மோட்டார் சைக்கிள், அன்றாட வசதியையும் ஓட்டுநரின் நம்பிக்கையையும் மேம்படுத்தும் நோக்கில், இந்த பிரிவில் மிக நீளமான இருக்கை, 10-லிட்டர் சேமிப்புத் திறன், ரிவர்ஸ் மோட், கனெக்டட் வெஹிக்கிள் டெக்னாலஜி மற்றும் பல பாதுகாப்பு எச்சரிக்கைகள் உள்ளிட்ட ஓட்டுநரை மையமாகக் கொண்ட பல அம்சங்களையும் ஒருங்கிணைக்கிறது.

புதிய ரோர் ஈவோ, தற்போது முதல் 10,000 வாடிக்கையாளர்களுக்கு ₹99,999 (எக்ஸ்-ஷோரூம்) என்ற சிறப்பு அறிமுக விலையில் வழங்கப்படுகிறது. அதன் பிறகு, விலை ₹1,24,999 (எக்ஸ்-ஷோரூம்) ஆக மாற்றியமைக்கப்படும். ₹777 கட்டணத்தில் முன்பதிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் ஜூன் 2026 முதல் நாடு முழுவதும் தொடங்கும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது. ஓபன் எலக்ட்ரிக் நிறுவனம் தற்போது கர்நாடகா முழுவதும் 10 ஷோரூம்களையும், தேசிய அளவில் 18 மாநிலங்கள் மற்றும் இந்தியாவின் முக்கிய பெருநகர சந்தைகளிலும் 150 ஷோரூம்களின் வலையமைப்பு மூலம் செயல்படுகிறது.

இந்த ஆண்டின் இறுதிக்குள் இந்த எண்ணிக்கையை 350 ஷோரூம்களாக விரிவுபடுத்தவும் ஓபன் திட்டமிட்டுள்ளது. பெங்களூரு இந்நிறுவனத்தின் உற்பத்தி மற்றும் புத்தாக்க மையமாகவும் விளங்குகிறது. ஓபன் எலக்ட்ரிக் நிறுவனம் இங்கு ஒரு உற்பத்தி ஆலையை இயக்குகிறது, இதன் ஆண்டு உற்பத்தித் திறன் ஒரு லட்சம் அலகுகள் ஆகும், மேலும் இதை ஆண்டுக்கு மூன்று லட்சம் அலகுகள் வரை அதிகரிக்க முடியும்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்