பெங்களூரு, பிப். 24: தமிழ்நாட்டின் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, கர்நாடக மாநில திமுக மகளிர் அணி சார்பில் மகப்பேறு தாய்மார்களுக்கு நல்ல உதவிகள் வழங்கப்பட உள்ளது.
மார்ச் 10 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு பெங்களூரு ஸ்ரீராமபுரம் காவல் நிலையம் அருகில் உள்ள மகப்பேறு மருத்துவமனையில் தாய்மார்களுக்கு நல்ல உதவிகள் வழங்கப்படுகிறது. முன்னதாக அன்று காலை 9 மணிக்கு மாநில திமுக கலைஞரக வளாகத்தில் கட்சியின் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதில் கர்நாடக மாநில திமுக நிர்வாகிகள், முன்னாள் மாநில நிர்வாகிகள், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள், இளைஞர் அணி, இலக்கிய அணி, தொமுசா பேரவை நிர்வாகிகள் உள்ளிட்டோர் மகப்பேறு மருத்துவமனையில் உள்ள தாய்மார்களுக்கு நல்ல உதவிகள் வழங்குவார்கள்.
இவ்விரு நிகழ்ச்சிகளிலும், கட்சியினர் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று திமுக மகளிர் அணி நிர்வாகிகள் சற்குண இளமதி, ராஜேஸ்வரி, ஜே.மங்கம்மாள், பி.காயத்ரி துணை, மணிமேகலை ஆகியோர் தெரிவித்துள்ளனர்.