முகப்பு Politics மக்களவைத் தேர்தல்: நீலகிரி தொகுதியில் ஆ.இராசாவின் வெற்றி பிரகாசமாக உள்ளது: ந.இராமசாமி

மக்களவைத் தேர்தல்: நீலகிரி தொகுதியில் ஆ.இராசாவின் வெற்றி பிரகாசமாக உள்ளது: ந.இராமசாமி

0

நீலகிரி, ஏப். 7: மக்களவைத் தேர்தலில் நீலகிரி தொகுதியில் ஆ.இராசாவின் வெற்றி பிரகாசமாக உள்ளது என்று கர்நாடக மாநில திமுக அமைப்பாளர் ந.இராமசாமி தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் ஏப். 19 ஆம் தேதி ஒரேகட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் நீலகிரி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.இராசாவை ஆதரித்து அத்தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட இராமசாமி, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி செய்து வரும் பாஜக, மக்களுக்கான வளர்ச்சி திட்டங்கள் எதையும் செய்யவில்லை.

இதனால், அக்கட்சியை தோற்கடிக்க வேண்டும் என்று மக்கள் முடிவு செய்துள்ளனர். தமிழ்நாட்டில் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் மக்கள் பல்வேறு நலத் திட்டங்களின் பயனை அடைந்து வருகின்றனர். இதனால் தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 40 மக்களவைத் தொகுதிலும், திமுக கூட்டணி கட்சிகளை மக்கள் வெற்றி செய்ய முடிவு செய்துள்ளனர். குறிப்பாக நீலகிரி தொகுதியில் ஆ.இராசாவின் வெற்றி பிரகாசமாக உள்ளது. அவர் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்றார்.

முந்தைய கட்டுரைபீனிக்ஸ் மால் ஆஃப் ஆசியா பிரபல செஃப் கேரி மெஹிகனுடன் ஒரு பிரத்யேக மாஸ்டர் கிளாஸ்
அடுத்த கட்டுரைபியூ 2 முடிவுகள் 2024: தீக்ஷாவின் கல்வியியல் அணுகுமுறையின் செயல்திறனுக்கான மற்றொரு சான்று

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்