பெங்களூரு, பிப். 3: பெங்களூரில் அஇஅதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 55 வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
கர்நாடக மாநில அஇஅதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 55 வது நினைவு நாள் கர்நாடக மாநில அஇஅதிமுக செயலாளர் முனைவர் எஸ். டி. குமார் தலைமையில் இப்ராஹீம் சாகிப் சாலையில் உள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் அனுசரிக்கப்பட்டது.
இதில் மாநில அவைத்தலைவர் அன்பரசன் மாநில இணைச் செயலாளர் சந்திரிகா, பொதுக்குழு ரவிக்குமார், திருமதி சத்யா, மாவட்ட செயலாளர்கள் சரவணன், நடராஜ் திருவேங்கடம், அம்மா ஹரி, சோபா குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.