பெங்களூரு, அக். 12: பெங்களூரு மல்லேஸ்வரம் டாக்டர் சோலங்கி கண் மருத்துவமனையில் வியாழக்கிழமை உலக கண் பார்வை தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மருத்துவமனையின் துணை மேலாண் இயக்குநர் டாக்டர் மம்தா சோலங்கி பெங்களூரு மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் நாகரத்னா, முனிலட்சுமி, விஎச்சியைச் சேர்ந்த கல்பனா, சேஷாத்ரிபுரம் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் அனிதா பவார், எச்பிஆர் லேஅவுட்டைச் சேர்ந்த் சமூக சேவகர்கள் ராஜன்னா, சேகர்,
சோலங்கி கண் மருத்துவமனையின் மேலாண் இயக்குநர் டாக்டர் பிரியாங்க் சோலங்கி, கர்நாடக தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் பொருளாளர் க.தினகர் வேலு, மருத்துமனையின் மூத்த ஆலோசகர் டாக்டர் எம். முரளிதர ராவ், நிர்வாகத்தைச் சேர்ந்த போஸர் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.