பெங்களூரு, செப். 18: பெங்களூரு மல்லேஸ்வரத்தில் ஸ்டான்ஃபோர்டு ஸ்பெஷாலிடி லேப்ஸ் நிறுவனத்தின் புதிய கிளை செப். 16 ஆம் தேதி திறக்கப்பட்டது.
தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு கர்நாடக மாநில பத்திரிகையாளர் கர்நாடக பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் பி.பாஸ்கர் ரெட்டி முன்னிலையில் யமுனா பிரபாகரன் வரவேற்புரை ஆற்றினார்.
குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து சமூக ஆர்வலர்கள் ஸ்ரீலதா கிருஷ்ணன், ஹவா ஏ.எச்.ஹன்ஜாரா, லட்சுமி தேஜஸ்வரி, கவிதா பிரேம் ஆனந்த், ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி தொடக்கி வைத்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக கர்நாடக பத்திரிகையாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜானகி மோகன், பிரபல திரைப்பட இயக்குநர் மற்றும் ஸ்டண்ட் மாஸ்டர் ஜாலி பாஸ்டன், சமூக ஆர்வலர் எம்.ஜி.ஆர்.மணி, திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர் ஜி.பி.செல்வகுமார், ரேவ். டி.எஸ்.கிருஸ்துதாஸ், டி.எஸ்.மகிமைதாஸ், கர்நாடக தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் பொருளாளர் தினகரவேலு, பட்டு ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார்கள்.
ஸ்டான்ஃபோர்டு குழுமத்தின் சார்பில் முடாசிர் மற்றும் கிரிஷ் ஏற்பாடு செய்த நிகழ்வில் செயல் திட்டங்களை பற்றி, மன்சூர் கான், ஸ்நேகா ஜே.பி.ராஜ், கே.என். நமீதா, பிரபாகரன் ஆகியோர் விவரித்தனர்.
நிகழ்ச்சியின் முடிவில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும், ஸ்டான்ஃபோர்டு ஸ்பெஷாலிடி லேப்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி கமல் ரவீந்திரதாஸ், பூஜா கமல் ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.