முகப்பு Politics பிப். 3 இல் பேரறிஞர் அண்ணாவின் 55-வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி

பிப். 3 இல் பேரறிஞர் அண்ணாவின் 55-வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி

0

பெங்களூரு, ஜன. 30: கர்நாடக மாநில திமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 55-வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி பிப். 3 ஆம் தேதி நடைபெறுகிறது.

இது குறித்து மாநில திமுக அமைப்பாளர் ந.இராமசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: சனிக்கிழமை (பிப்.3) காலை 10 மணிக்கு பெங்களூர் ஸ்ரீராமபுரம் ராமச்சந்திரபுரத்தில் உள்ள கர்நாடக மாநில திமுக தலைமை அலுவலகமான கலைஞரகம், தளபதி மு.க.ஸ்டாலின் மணிவிழா அரங்கத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.

நிகழ்ச்சியில் அரங்கத்தில் அமைத்துள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாநில திமுக நிர்வாகிகள், முன்னாள் நிர்வாகிகள், தலைமைப் பொதுக்குழு உறுப்பினர்கள், இளைஞர் அணி நிர்வாகிகள், இலக்கிய அணி நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள், தொமுச பேரவை நிர்வாகிகள் மற்றும் கிளைக்கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மலர்த்துாவி மரியாதை செலுத்துகிறார்கள்.

நிகழ்ச்சியில் திமுக‌ உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ள கேட்டுக்கொள்கிறேன் என்று கர்நாடக மாநில திமுக அமைப்பாளர் ந.இராமசாமி அதில் தெரிவித்துள்ளார்.

முந்தைய கட்டுரைரூ.25999 முதல் வகுப்பு பெரிஸ்கோப் டெலிஃபோட்டோவில் ரியல்மி 12 ப்ரோ சீரிஸ் 5ஜியுடன் புதிய எண் சீரிஸ் அறிமுகம்
அடுத்த கட்டுரைபெங்களூரு ஒயிட்ஃபீல்டில் அதுல்யா சீனியர் கேரின் 2வது இல்லம் திறப்பு

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்