முகப்பு Politics திராவிட இயக்கத்தின் கொள்கை முழக்கங்களை இந்தியா மட்டுமல்லாமல் உலகளவில் கொண்டு சேர்த்த பெருமை முரசொலி மாறனை...

திராவிட இயக்கத்தின் கொள்கை முழக்கங்களை இந்தியா மட்டுமல்லாமல் உலகளவில் கொண்டு சேர்த்த பெருமை முரசொலி மாறனை சாரும்: கர்நாடக மாநில திமுக‌ அமைப்பாளர் ந.இராமசாமி

0

பெங்களூரு, நவ. 14: திராவிட இயக்கத்தின் கொள்கை முழக்கங்களை இந்தியா மட்டுமல்லாமல் உலகளவில் கொண்டு சேர்த்த பெருமை முரசொலி மாறனை சாரும் என்று கர்நாடக மாநில திமுக அமைப்பாளர் ந.இராமசாமி தெரிவித்தார்.

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 19‍ வது நினைவு தினம் கர்நாடக மாநில திமுக சார்பில் பெங்களூரு இராமசந்திரபுரத்தில் உள்ள மாநில தலைமைக் கழக அலுவலகமான கலைஞரகத்தில் உள்ள மு.க.ஸ்டாலின் மணிவிழா அரங்கில் அனுசரிக்கப்பட்டது. முரசொலி மாறன் உருவப்படத்திற்கு திமுக மாநில அவைத்தலைவர் மொ.பெரியசாமி, மாநில பொருளாளர் கே.தட்சணாமூர்த்தி, மாநில அமைப்பாளர் ஜி.இராமலிங்கம் உள்ளிட்டோர் முன்னிலையில், மாநில அமைப்பாளர் ந.இராமசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் அவர் பேசியது: திராவிட முன்னேற்றக்கழகத்தின் வளர்ச்சிக்காக அண்ணாவின் விரல் நீட்டி அழைக்கப்பட்டு, கட்சித் தலைவர் கலைஞரின் வழிகாட்டுதலின் பேரில் செயல்பட்டவர் முரசொலி மாறன். அவர் எழுத்தாற்றல், பேச்சாற்றல் மட்டுமில்லாமல் செயலாற்றலிலும் வல்லவராக திகழ்ந்தார். நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து, இரு அவைகளிலும் அவர் எடுத்து வைத்த வாதங்கள் இன்றளவும் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட்டவையாகும். சனாதன சக்திக்களின் ஆதிக்கத்தில் அடிமைப்பட்டு கிடந்த திராவிட இனத்தை, சுயமரியாதை பாதையில் அழைத்துச் செல்ல போராடியவர் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஆகியோர் வழியில் திராவிட இயக்கத்தின் கொள்கை, தத்துவங்கள், பண்பாடு கலாசாரத்தை இந்தியா மட்டுமின்றி உலகளவில் தனது எழுத்தாற்றல் மூலம் கொண்டு சேர்ந்தவர் முரசொலி மாறன் ஆவார் என்றார்.

முந்தைய கட்டுரைதிமுக இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதற்கு கர்நாடக திமுக வரவேற்பு
அடுத்த கட்டுரை3 வது தலைமுறை ரோபோடிக் அறுவை சிகிச்சைப் பிரிவை தங்கள் மக்ரத் சாலையில் உள்ள ஹொஸ்மட் மருத்துவமனையில் அறிமுகம்

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்