முகப்பு Politics திமுக துணை மேலாளர் மறைவு கர்நாடக மாநில திமுக இரங்கல்

திமுக துணை மேலாளர் மறைவு கர்நாடக மாநில திமுக இரங்கல்

0

பெங்களூரு, பிப். 13: திமுக தலைமை கழக துணை மேலாளர் ஜெயக்குமார் காலமானார். இவரது மறைவிற்கு கர்நாடக மாநில திமுக சார்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஈடு செய்ய முடியாது பேரிழப்பு என்று மாநில திமுக அமைப்பாளர் ந.ராமசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கர்நாடக மாநில திமுக அமைப்பாளர் ந.ராமசாமி வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது. திமுக தலைமை கழக துணை மேலாளர் ஆக அண்ணா அறிவாலயத்தில் சிறப்பாக பணியாற்றி வந்தவர் ஜெயக்குமார் இவர் கழக மூத்த நிர்வாகி. முத்தமிழ் அறிஞர் கலைஞர் தளபதி முதல்வர் மு க ஸ்டாலின் ஆகியோரின் நம்பிக்கை பெற்று அவர்களுடன் பழகும் வாய்ப்பையும் பெற்றவர். திராவிட கொள்கைகளில் தீராத பற்று கொண்டு கழகத்தின் ஏற்ற இறக்கங்களில் உடன் பயணித்து வந்தவர்.

அண்ணா அறிவாலயத்தில் மிகச்சிறந்த நிர்வாகியாக திகழ்ந்தார் அதே சமயம் கழகத்தின் ஒப்பற்ற பற்றாளராக முன்னோடியாக திகழ்ந்தார். கர்நாடக மாநில திமுக மீது தனி பாசம் கொண்டவர் எனக்கு இவரை 40 ஆண்டுகளாக தெரியும் பழகுவதில் மிகவும் இனிமையானவர் பண்பானவர் அன்பானவர். இவரது இழப்பு கழகத்திற்கு பேரிழப்பு ஆகும். இவரை இழந்து வாடும் குடும்பத்தினர் கழகத்தினர் அனைவருக்கும் கர்நாடக மாநிலத் திமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

முந்தைய கட்டுரைசுற்றுலா மலேசியா 2024 ஆம் ஆண்டிற்கான இந்தியாவில் அதன் தொடக்கத் தொடர் விற்பனை
அடுத்த கட்டுரைபெங்களூரைச் சேர்ந்த ஆகாஷ் பைஜூசின் 13 மாணவர்கள் ஜேஇஇ முதல் அமர்வில் 99 சதம் மதிப்பெண் பெற்று தேர்ச்சி

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்