முகப்பு Politics தமிழ்நாட்டில் அமைச்சர் செந்தில் பாலாஜி நள்ளிரவில் கைது: கர்நாடக திமுக கண்டனம்

தமிழ்நாட்டில் அமைச்சர் செந்தில் பாலாஜி நள்ளிரவில் கைது: கர்நாடக திமுக கண்டனம்

0

பெங்களூரு, ஜூன் 14: தமிழ்நாட்டில் அமைச்சர் செந்தில் பாலாஜி நள்ளிரவில் கைது செய்யப்பட்டதற்கு கர்நாடக மாநில திமுக கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அக்கட்சியின் மாநில அமைப்பாளர் ந.இராமசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தமிழ் நாட்டின் அமைச்சர் செந்தில்பாலாஜியை நள்ளிரவில் கைது செய்ததற்கு, க‌ர்நாடக மாநில திமுக சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.

ஒன்றிய அரசின் பழிவாங்கத் துடிக்கும் அத்துமீரிய செயல் இது. திமுக அடக்குமுறைகளை பல முறை சந்தித்து, வெற்றி கண்டு வீருநடை போட்டு வரும் இயக்கமாகும். இந்த பழி வாங்கும் செயலைக் கண்டு திமுக அஞ்சபோவதில்லை. நள்ளிரவில் கைது, ஆனவ, அடக்குமுறை, இவைகளை எல்லாம் வென்றெடுத்து தமிழ்நாட்டையும், கட்சியையும், வீரத்தோடு வழிநடத்தும் ஆற்றலை அண்ணாவிடமும், கலைஞரிடமும் கற்றவர் திமுக தலைவரும், தமிழ்நாட்டின் முதல்வர் எங்கள் தளபதியார்.

மத்திய ஆனவ, சர்வாதிகார, பாசிச ஆட்சிக்கு முடிவுரை எழுதும் நாள் வெகு தூரத்தில் இல்லை. அம‌லாக்குதுறையின், இந்த ஆனவ செயலுக்கு கருநாடக மாநில திமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.

முந்தைய கட்டுரைபெங்களூரு வித்யாரண்யபுராவில் ஏ.எஸ்.டிரீம் ஸ்டுடியோ திறப்பு
அடுத்த கட்டுரைபெங்களூரில் பௌன்ஸ் இன்கின் உள்ளரங்க அதிரடி-சாகசப் பூங்கா திறப்பு

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்