முகப்பு Politics சி.வி.ராமன் நகர் தொகுதில் ஆம் ஆத்மி கட்சிக்கு அமோக ஆதரவு: மோகன் தாசரி

சி.வி.ராமன் நகர் தொகுதில் ஆம் ஆத்மி கட்சிக்கு அமோக ஆதரவு: மோகன் தாசரி

0

பெங்களூரு, ஏப். 10: பெங்களூரு சி.வி.ராமன் நகர் தொகுதில் ஆம் ஆத்மி கட்சிக்கு அமோக ஆதரவு பெருகி வருகிறது என்று அக்கட்சியின் வேட்பாளர் மோகன் தாசரி தெரிவித்தார்.
பெங்களூரு சி.வி.ராமன் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளராக மோகன் தாசரி போட்டி இடுகிறார். இளைஞரான் அவர் அத்தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு, தொடர்ந்து தொகுதியின் பல்வேறு இடங்களுக்கு சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு செல்லும் இடங்களில் எல்லாம் தொடர்ந்து மக்கள் ஆதரவு அளித்து வருகின்றனர்.

இந்திராநகரில் ஞாயிற்றுக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட அவர் ஹொய்சலா நகரில் அக்கட்சியின் தேர்தல் பிரசார‌த்திற்காக‌ தொடங்கப்பட்ட அலுவலகத்தை பார்வையிட்டார். அப்போது ஆம் ஆத்மி கட்சியில் புதிதாக சேர்ந்த மர்ஃபிடவுன் இளைஞர்களை வரவேற்று அக்கட்சியின் சின்னம், பெயர் எழுத்தப்பட தொப்பியை அணிவித்து, அவர்களை உற்சாகமூட்டும் வகையில் உரையாற்றினார். இளைஞர்களிடம் கல்விக்கு முக்கியத்துவம் தருமாறு அவர் வலியுறுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இத்தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினராக 3 முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற பாஜகவைச் சேர்ந்த ரகு, இந்த தொகுதி மக்களுக்கு எந்த வளர்ச்சிப்பணிகளை செய்யவில்லை. குறைந்தப் பட்ச‌ம் குடிசை பகுதி அதிகம் உள்ள இந்த தொகுதியில், குடிசை மாற்று வாரியத்தின் மூலம் ஒரு வீட்டைக் கூட கட்டித் தரவில்லை. இந்த‌
தொகுதியில் அதிக அளவில் பட்டியலின மக்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் பலர் இன்னும் ஏழைகளாக உள்ளனர். அவர்களின் வளர்ச்சிக்கு இந்த தொகுதியில் 3 முறை வெற்றி பெற்ற பாஜகவை சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் எதையும் செய்யவில்லை.

இதனை உணர்ந்துள்ள மக்கள் இந்த முறை சி.வி.ராமன் தொகுதியில் மாற்றத்தை விரும்புகின்றனர். குறிப்பாக தேசியக் கட்சிகளான பாஜக, காங்கிரஸ் ஆட்சிகளில் இந்த தொகுதிக்கு எந்த வளர்ச்சிப்பணிகளையும் செய்யல்லை. இதனால் அவர்கள் ஆம் ஆத்மி கட்சியை ஆதரிக்க முடிவு செய்துள்ளனர். என்னை இந்த தொகுதியின் வேட்பாளராக ஆம் ஆத்மி கட்சியின் தலைமை அறிவித்தப் பிறகு பெரும்பான்மையானவர்கள் என்னை ஆதரிவித்து வருகின்றனர். இதனால் இந்தத் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு பெருகி வருகிறது. நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிடும் என்னை அதிக அளவில் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வார்கள் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.

நான் வெற்றி பெற்றால் இந்த தொகுதியை மாநில அளவில் வளர்ச்சிப்பணிகளில் மாதிரி தொகுதியாக மாற்றிக் காட்டுவேன். டெல்லி, பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர்கள் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக அரவிந்த் கேஜரிவாலின் வழிகாட்டுதலின் பேரில் ஊழல் இல்லாத நிர்வாகத்தை செயல்படுத்தி காட்டுவேன். எனவே ஆம் ஆத்மி கட்சிக்கு மாநில அளவில் மட்டுமின்றி, சி.வி.ராமன் தொகுதியிலும் மக்கள் ஒரு வாய்ப்பை வழங்க வேண்டும். ஊழல் மற்றும் விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள இந்த தொகுதி மக்களுக்கு, சிறந்த கல்வியையும், பொருளாதாரத்தையும், நான் வெற்றி பெற்றால் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளவேன் என்றார்.

முந்தைய கட்டுரைதடுப்பு ஆரோக்கியம் தேசிய முன்னுரிமையாக மாற வேண்டும்: அப்பல்லோ மருத்துவமனை
அடுத்த கட்டுரைமாநில அளவிலான ஆபரணத் திருவிழா: பங்கு பெறும் வாடிக்கையாளர்களுக்கு குலுக்கல் முறையில் தங்கம், வெள்ளி பரிசு

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்