முகப்பு Politics கர்நாடக மாநில அண்ணா திமுக சார்பில் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம்

கர்நாடக மாநில அண்ணா திமுக சார்பில் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம்

0

பெங்களூரு, ஏப். 15: கர்நாடக மாநில அண்ணா திமுக சார்பில் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த ஆலோசனை, செயல்வீரர்கள் கூட்டம் பெங்களூரில் நடைபெற்றது.

இதில் அக்கட்சியின் மாநில செயலாளர் குமார் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் அவைத் தலைவர் ஏ ஆனந்தராஜ், பொருளாளர் மனோகர், இணைச்செயலாளர் வசந்த ராணி, துணைச் செயலாளர் அனிதா, மாவட்ட கழக செயலாளர் முனிரத்தினம், தொகுதி செயலாளர்கள் கிருஷ்ணா, பரசுராமன், இஸ்ரேல், பங்காருபேட்டை ரங்கசாமி, பொதுக்குழு உறுப்பினர்கள் நடராஜ், சண்முகம், ரவி, அண்ணா தொழிற்சங்க பேரவை மாநில செயலாளர் எஸ் ரவி, கோலார் மாவட்ட கழக செயலாளர் சாயி இன் ஷா, காந்திநகர் தொகுதி அவைத் தலைவர் பாண்டு உள்ளிட்ட ஏராள‌மானோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவை ஒட்டி அலங்கரிக்கப்பட்ட அவரது திருவுருவப்படத்திற்கு அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் வா.புகழேந்தி மற்றும் நிர்வாகிகள் மலர் தூவி மாலை அணிவித்தனர். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் கூட்டணியில் இணைந்து போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டால் கோலார் தங்கவயல் காந்திநகர், பங்காருபேட்டை போன்ற தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுவது என்கிற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர், முன்னாள் தமிழ்நாடு முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திடம் சமர்ப்பித்து அனுமதி பெறப்படும் என தீர்மானிக்கப்பட்டது. செய்தியாளர்கள் மத்தியில் வா புகழேந்தி பேசும் போது கோலார் தங்கவேல் காந்திநகர் போன்ற இடங்களில் தனித்து நின்று புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆணைக்கிணங்க தொடர் வெற்றிகளை பெற்றிருக்கிறோம். ஆகவே இந்த தேர்தலிலும் கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அனுமதித்தால் போட்டியிடத் தயார். தேர்தல் ஆணையத்தில் ஒருங்கிணைப்பாளராக அவர் இருப்பதால் அவர்தான் ஏ,பி பாரங்களை வழங்க வேண்டும்.

இரட்டை இலை சின்னம் எங்களுக்குத்தான் கிடைக்கும் என்று கூறிய அவர், ஓபிஎஸ் அவர்கள் நிர்வாகிகளை அறிவித்த பின்னர் இந்த மண்டபத்தில் இவ்வளவு பெரிய கூட்டத்தை பார்க்க முடிகிறது மீண்டும் கர்நாடகத்தில் கட்சி எழுச்சி பெற்றுள்ளது என்றார். முன்னதாக ஓபிஎஸ் அவர்கள் புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து அறிவித்தமைக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. ஓபிஎஸ் அவர்களால் அறிவிக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது. 24 ஆம் தேதி திருச்சியில் நடைபெறும் மாநாட்டிற்கு கர்நாடகத்திலிருந்து நூற்றுக்கணக்கானவர்கள் செல்வது என்று தீர்மானிக்கப்பட்டது.

முந்தைய கட்டுரைகர்நாடக அஇஅதிமுக சார்பில் தமிழ் புத்தாண்டு தினம், அண்ண‌ல் அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
அடுத்த கட்டுரைராஜாஜிநகர் பாஜக வேட்பாளர் எஸ்.சுரேஷ்குமார், அக்கட்சி தொண்டர்களுடன் பேரணியாக சென்று வேட்பு மனு தாக்கல்

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்