முகப்பு Politics கருநாடக மாநில தி.மு.க சார்பில் முப்பெரும் விழா

கருநாடக மாநில தி.மு.க சார்பில் முப்பெரும் விழா

0

பெங்களூரு, செப். 13: செப். 15‍-ஆம் தேதி கருநாடக மாநில தி.மு.க சார்பில் பெங்களூரில் முப்பெரும் விழா நடைபெற உள்ளது.

இது குறித்து அக்கட்சியின் மாநில அமைப்பாளர் ந.இராசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: பெங்களூரு இராமசந்திரபுரம் திமுக அலுவலகத்தில் உள்ள‌ கலைஞரக வளாகம், தளபதி மு.க.ஸ்டாலின் அரங்கத்தில் வெள்ளிக்கிழமை காலை 9 மணி அளவில் முப்பெரும் விழா தொடங்கி நடைபெற உள்ளது.

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் பிறந்தநாள் மற்றும் தி.மு.க. உதய நாள் உள்ளிட்டவைகளை இணைந்து, கருநாடக மாநில தி.மு.க. சார்பில் முப்பெரும் விழா நடைபெறும். விழாவில் தளபதி மு.க.ஸ்டாலின் மணிவிழா அரங்கத்தில் தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோரின் திருவுருவச் சிலைக்களுக்கு மாநில தி.மு.க. நிர்வாகிகள், முன்னாள் மாநில நிர்வாகிகள், தலைமைப் பொதுக்குழு உறுப்பினர்கள்,

இளைஞர் அணி நிர்வாகிகள், இலக்கிய அணி நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள், தொ.மு.ச.பேரவை நிர்வாகிகள் ஆகியோர் மாலைகள் அணிவித்து மலர் துவி மரியாதை செலுத்தி அனைவருக்கும் இனிப்பு வழங்கப்படும். கருநாடக மாநில தி.மு.க சார்பில் நடைபெறும் முப்பெரும் விழாவில் கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் திரளாக வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி குறித்த தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய கட்டுரைஹெச்.சி.ஜி புற்றுநோய் மருத்துவமனையில் குறைந்த அளவிலான நோயெதிர்ப்புடன் தலை மற்றும் கழுத்து புற்றுநோய்க்கு சிகிச்சை
அடுத்த கட்டுரைகற்றல் தீர்வுகளை வழங்கும் மணிப்பால் மெட்ஏஸ் அறிமுகம்

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்