முகப்பு Politics அக். 29 இல் கர்நாடக திமுக சார்பில் முப்பெரும் விழா

அக். 29 இல் கர்நாடக திமுக சார்பில் முப்பெரும் விழா

0

பெங்களூரு, அக். 8: அக். 29 இல் கர்நாடக திமுக சார்பில் விருது வழங்கும் விழா, முப்பெரும் விழா நடைபெற உள்ளது.

பெங்களூரு மாநில தி.மு.க கஞைரகம் வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை மாநில தி.மு.க அமைப்பாளர் ந. இராமசாமி, மொ.பெரியசாமி முன்னிலையில் இளைஞர் அணி இலக்கிய அணி, மகளிர் அணி, தொ.மு.ச பேரவை, நிர்வாகிகளின் ஆலோசனைக் குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அக். 29 இல் கர்நாடக திமுக சார்பில் விருது வழங்கும் விழா, முப்பெரும் விழா நடத்தவது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

குழுவில் கலைஞர் நூற்றாண்டு விழா தி.மு.க பவளவிழா இவ்வாண்டு முழுக்க சிறப்பாக கொண்டாட தலைமைக் கழகம் அறிவித்தபடி, சிறப்பாக செயல்படுத்திட மாநிலத்தில் இயங்கும் மாநில தி.மு.க துணை அமைப்புகளின் சார்பில் விழா கூட்டங்கள், நடத்திட முடிவெடுக்கப்பட்டது.

கூட்டத்தில் இலக்கிய அணியைச் சேர்ந்த போர்முரசு கதிரவன், வி.எஸ். மணி, கே.எஸ் சுந்தரேசன், கருணாநிதி, இளைஞர் அணியை சேர்ந்த‌ விக்ரம், முருகானந்தன், லியோ, முகமது ஹாரீப், மகளிர் அணி அமைப்பாளர் சற்குணம், காயத்திரி, ஆற்காடு அன்பழகன், உட்லண்ட்ஸ் கணேசன், எஸ்.ஏழுமலை, பிரபு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

முந்தைய கட்டுரைதமிழ்நாட்டின் அமைச்சர் ஆர்.காந்தியின் மைத்துனர் சந்திரசேகர் காலமானார்
அடுத்த கட்டுரைஅக். 15 இல் பெங்களூரு கோல்டு ஃபெஸ்டிவல் தொடக்கம்

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்