முகப்பு Crime வெடிகுண்டு, ஆயுதங்களுடன் 5 பேர் கைது

வெடிகுண்டு, ஆயுதங்களுடன் 5 பேர் கைது

0

பெங்களூரு, ஜூலை 19: பெங்களூரில் நாச‌வேலையில் ஈடுபட்ட‌ 5 பேரை வெடிகுண்டு, ஆயுதங்களுடன் போலீசார் கைது செய்தனர்.

பெங்களூரில் நாசவேலையில் ஈடுபட்டதாக என்ஐஏ அதிகாரிகளின் ரகசிய தகவலின் அடிப்படையில் சிசிபி போலீசார் 5 பயங்கரவாதிகளை கைது செய்தனர்.

முதாசீர், பைசல் ரப்பானி, சுஹைல், உமர் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 40 துப்பாக்கி தோட்டாக்கள், இரண்டு கத்திகள், மொபைல், ரிவால்வர் மற்றும் பல வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைதானவர்களுக்கு பயிற்சி அளித்த ஜுனைத் தலைமறைவாக உள்ளார்.

2017ல் ஆர்டி நகரில் நடந்த கொலை வழக்கில் 21 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். இதில், கைது செய்யப்பட்ட 5 பேரும் வெடிகுண்டு வைக்க‌ பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள தீவிரவாதிகளுடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டினர். சிசிபி விசாரணையில் அவர்கள் நகரின் பத்து பகுதிகளில் வெடிகுண்டு வெடிக்க திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தினமும் மாலையில் பயிற்சிக்காக ஒரே இடத்தில் கூடுவது வழக்கம். அனைவருக்கும் மூளையாக செயல்பட்டவர் ஜுனைத். சிசிபி போலீசார் பயிற்சி இடத்தை கண்டுபிடித்து 5 பேரை கைது செய்தனர். கைது நடவடிக்கைக்கு சென்றபோது ஜுனைத் அங்கு இல்லை. அவரை கைது செய்வதற்கான நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

முந்தைய கட்டுரைஇந்தியாவை நகை சுற்றுலா மையமாக மாற்ற ஜிஜேசி திட்டம்
அடுத்த கட்டுரைக்ருஹ லட்சுமி திட்டத்தை தொடக்கி வைத்தார் முதல்வர் சித்தராமையா

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்