பெங்களூரு, டிச. 14: நூற்றாண்டு பழமை வாய்ந்த அமிங்காட் கரதண்ட் தனது 4 வது கடையை ஜெயநகர் 9 வது பிளாக் 41 வது கிராஸில் திறந்துள்ளது.
கரதண்ட் ஆரோக்கியமான இனிப்பு. இது கர்ப்பிணிப் பெண்கள், பாடி பில்டர்கள், வளரும் குழந்தைகளுக்குப் பிடித்தமான புரதம் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த பொருட்களுடன் தயாரிக்கப்படுகிறது. இதன் விற்பனைக் கடையை பெங்களூரு ஜெயநகர் எம்எல்ஏ சௌமியா ரெட்டி திறந்து வைத்தார். அதனுடன் உலகிலேயே மிகப்பெரிய 1000 கிலோ கரதண்ட் கண்காட்சியையும் தொடக்கி வைத்தார்.
அப்போது கரதண்ட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி பெருமையுடன் எடுத்துரைத்தார். கர்ப்பிணிப் பெண்கள், ஜிம்னாஸ்டிக்ஸ், வளரும் குழந்தைகள், முதியோர்கள் உள்ளிட்ட அனைத்து மக்களுக்கும் கரதண்ட் பயனுள்ள உணவு என்பதனை நினைவு கூர்ந்தார்.
வரலாற்று கரதண்டின் உரிமையாளர் சந்தோஷ் ஐஹோல்லி கூறுகையில், 4 ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் பெங்களூரு விஜயநகரில் எங்கள் முதல் விற்பனை கடையை தொடங்கினோம்.பெங்களூரு முழுவதும் இந்த தனித்துவமான இனிப்புக்கு அதிக தேவை உள்ளது. நாங்கள் இங்கு 4 வது கிளையை திறந்தோம். மல்லேஸ்வரம், எலஹங்கா போன்ற பகுதிகளில் கடைகளை திறக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் 70% பெங்களூரு மக்களைச் சென்றடைய நாங்கள் லட்சியத்தைக் கொண்டுள்ளோம். 1000 கிலோ கரதண்ட் 80 சமையல் கலைஞர்களால் 4 நாட்களில் முந்திரி, பருப்புகள், ஆர்கானிக் வெல்லம், தூய்மையான நெய், இயற்கை பசை போன்ற அனைத்து உலர் பழங்களையும் கொண்டு தயாரிக்கப்படும் மிகப்பெரிய கரதண்ட் ஆகும். இது அனைத்து மக்களுக்கும் மகத்தான பலத்தை அளிக்கிறது. இந்தக் கண்காட்சி டிசம்பர் 25 வரை நடைபெறுகிறது.