பெங்களூரு, டிச. 8: தெய்வப் புலவர் திருவள்ளுவர் ஜெயந்தி விழாவையொட்டி சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணீயளவில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
உலகப் பொதுமறை தந்த தெய்வப் புலவர் திருவள்ளுவர் ஜெயந்தி விழாவை இந்த ஆண்டும் பெங்களூரில் மிகச் சிறப்பாக கொண்டாடுவது குறித்து ஆலோசனைக் கூட்டம் பெங்களூரில் நடைபெறுகிறது.தெய்வப்புலவர் திருவள்ளுவர் ஜெயந்தி விழா குழு சார்பில் இந்த ஆலோசனைக் கூட்டம் வரும் சனிக்கிழமை (டிச.9) பிற்பகல் 2.30 மணிக்கு பெங்களூர் ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலக அரங்கத்தில் நடைபெறுகிறது.
தெய்வப்புலவர் திருவள்ளுவர் ஜெயந்தி விழா குழு தலைவர் பையப்பனஹள்ளி டி. ரமேஷ் இதற்கு தலைமை தாங்குகிறார். இதில் வழக்கம்போல் இந்த ஆண்டும் பெங்களூரில் திருவள்ளுவர் தின விழாவை மிக எழுச்சியுடன் கொண்டாடுவது குறித்தும் எந்த தேதியில் நடத்துவது என்பது குறித்தும் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும். இந்த கூட்டத்தில் தமிழ் அமைப்புகள் தமிழ் ஆர்வலர்கள் உள்பட தமிழர்கள் தவறாமல் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று பையப்பனஹள்ளி டி. ரமேஷ் அழைப்பு விடுத்துள்ளார்.