முகப்பு Politics திமுக சார்பில் முரசொலிமாறன் பிறந்த நாள் கொண்டாட்டம்

திமுக சார்பில் முரசொலிமாறன் பிறந்த நாள் கொண்டாட்டம்

0

பெங்களூரு, ஆக. 17: பெங்களூரில் வியாழக்கிழமை திமுக சார்பில் முரசொலிமாறனின் 90 வது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சியில் முரசொலிமாறன் உருவப்படத்திற்கு அக்கட்சியின் மாநில அமைப்பாளர் ந.இராமசாமி தலைமையில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அங்கிருந்த அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாநில அவைத் தலைவர் பெரியசாமி, மாநில அமைப்பாளர் ராமசாமி, மாநில பொருளாளர் தக்ஷிணாமூர்த்தி, மாநில துணை அமைப்பாளர் ராமலிங்கம், இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் விக்ரம், முருகானந்தன், ராஜசேகர், விகாஷ், மகளிர் அணி அமைப்பாளர் சற்குண இளமதி, மங்கம்மாள், அம்மாயி ஜெயவேல், ஆர்.சாந்தினி, தொழிலாளர் முன்னேற்ற சங்க நிர்வாகி சந்திரன், எம் ஆர் பழம்நீ, ப.மூர்த்தி, தா.கேசவன், உட்லண்ட்ஸ் கணேசன், தனுஷ், சதீஷ், எஸ்.ஏழுமலை, லோகநாதன், ஜி.நாகராஜன், சங்கரன், மாணிக்கவேல், அரவிந்த், முன்னாள் பொறுப்பு உறுப்பினர்கள் ஆனந்தராஜ், கே சுந்தரேசன், இரா.நாம்தேவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியை தொடர்ந்து மாநில அமைப்பாளர் ந.இராமசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: கலைஞரின் மனசாட்சியாக திகழ்ந்தவர் முரசொலிமாறன். அவர் திமுகவை மட்டுமின்றி, இந்திய அரசியலை வழிநடத்திவர். அவர் மத்திய நிதி அமைச்சராக பதவி வகித்தப்போது, வெளிநாட்டில் ஆற்றிய உரை இன்றளவிற்கும் உலக நாடுகளில் போற்றப்படுகிறது. திமுகவின் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பணி மிகவும் முக்கியமானது. அவரது பிறந்த நாளை திமுகவினர் அனைவரும் போற்றிக் கொண்டாடி வருகின்றனர் என்றார்.

முந்தைய கட்டுரைஇந்திய நாகரிகத்தின் வாழ்வுக்கான போராட்டத்தை விவரிக்கும் பிராமின் ஜெனோசைடு (பிராமண இனப்படுகொலை) புத்தகம் வெளியீடு
அடுத்த கட்டுரைஸ்டீல்கேஸின் கர்மன் நாற்காலி அறிமுகம்

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்