முகப்பு Politics தமிழருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்த காங்கிரஸ் கட்சிக்கு நன்றி: ந.இராமசாமி

தமிழருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்த காங்கிரஸ் கட்சிக்கு நன்றி: ந.இராமசாமி

0

பெங்களூரு, மே 7: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட தமிழருக்கு வாய்ப்பளித்த காங்கிரஸ் கட்சிக்கு நன்றி என்று திமுக மாநில அமைப்பாளர் ந.இராமசாமி தெரிவித்தார்.

பெங்களூரில் சனிக்கிழமை சி.வி.ராமன்நகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் தமிழர் ஆனந்தகுமாரை சந்தித்த இராமசாமி, அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். அவருக்கு போட்டியிட வாய்ப்பளித்த காங்கிரஸ் கட்சிக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலினின் உத்தரவிற்கு இணங்க கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களுக்கு திமுக ஆதரவு தெரிவித்து, வாக்கு சேகரித்து வருகிறது.

கர்நாடகத்தில் காங்கிரஸ் 150 இடங்களுக்கும் அதிகமாக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. காங்கிரஸ் ஆட்சியை பிடித்தால் பெண்களுக்கு சிகப்பு பேருந்துகளில் இலவச பயணம், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 2 ஆயிரம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுவதாக உறுதி அளித்துள்ளது. இதற்கும் மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட தமிழருக்கு வாய்ப்பளித்த காங்கிரஸ் கட்சிக்கு நன்றி என்றார்.

பின்னர் மாலை ஆனேகல்லில் காங்கிரஸ் வேட்பாளர் சிவண்ணாவை ஆதரித்து நடைபெற்ற கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் ராகுல்காந்தி, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோர் பங்கேற்ற கூட்டத்தில் கலந்து கொண்டார்.

முந்தைய கட்டுரைகர்நாடகத்தில் காங்கிரஸ் அலை வீசுகிறது: திமுக மாநில அமைப்பாளர் ந.இராமசாமி
அடுத்த கட்டுரைபெண்கள் திறமையானவர்களாக இருக்க வேண்டும்: நிர்மலா சீதாராமன்

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்