பெங்களூரு, டிச. 11: பெங்களூரு அரண்மனை மைதானம் ராயல் சென்ட் அரங்கில் டிச. 18 ஆம் தேதி ஸ்ரீ சித்தேஷ்வர் பிரம்மரிஷி குருதேவரின் திவ்ய தரிசனம் மற்றும் மஹா ஆசீர்வாதம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இது குறித்து ஸ்ரீ சித்தேஸ்வர் தீர்த்த பிரம்மரிஷி ஆஸ்ரமம், விஸ்வ தர்ம சேத்னா மஞ்ச், பெங்களூரு கேந்திரா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: பெங்களூரு பெல்லாரி சாலை, அரண்மனை மைதானம் ராயல் சென்ட் அரங்கில் (கேட் 6) டிச. 18 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ சித்தேஷ்வர் பிரம்மரிஷி குருதேவரின் 70 நாட்கள் சக்தி சாதனாவிற்கு பிறகு, திவ்ய தரிசனம் மற்றும் மஹா ஆசீர்வாதம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
நிகழ்ச்சிக்கு பிறகு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும். இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என அதில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.