முகப்பு Health செப். 9 இல் ஓசூரில் பெண்கள் நலவாழ்வு முகாம்

செப். 9 இல் ஓசூரில் பெண்கள் நலவாழ்வு முகாம்

0

ஓசூர், செப். 7: ஓசூர், சூர்யா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சனிக்கிழமை (செப்.9) பெண்கள் நலவாழ்வு முகாம் நடைபெற உள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பு: ஓசூர் டேங்க் ஸ்ட்ரீட்டில் உள்ள‌ சூர்யா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை மிலன் கருத்தரிப்பு மையத்தின் சார்பில் பெண்கள் நலவாழ்வு முகாம் நடைபெற உள்ளது.

முகாமில் இலவசமாக ஆலோசனை, ஸ்கேன் மற்றும் பேப் ஸ்மியர், இரத்த பரிசோதனை 15 சதம் தள்ளுபடியில் செய்யப்படும். அதேபோல், ஐயுஐயில் ரூ.2,500 சலுகை, ஐவிஎப்பில் ரூ. 15,000 தள்ளுபடி, டெலிவரி கட்டணம் ரூ.45,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முகாமில் டாக்டர் காவ்யா கிருஷ்ணப்பா, டாக்டர் வினுதா பாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஆலோசனை வழங்குவார்கள். கருவுருதல் மற்றும் ஐவிஎப், லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சை, சரோகசி, எச்பிவி தடுப்பூசி, ரூபெல்லா தடுப்பூசி தேவைப்படுவோர், சந்திப்புகளுக்கு 7676786767, 8095665568 ஆகிய எண்களில் விபரங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

முந்தைய கட்டுரைஅக்.4 முதல் 6 வரை நொய்டா இந்தியா எக்ஸ்போ மையத்தில் தி பேட்டரி ஷோ இந்தியா 2023 கண்காட்சி
அடுத்த கட்டுரைபிரதமரின் செயல் மக்களை ஆத்திரமூட்டுவதாக உள்ளது: கர்நாடக முதல்வர் சித்தராமையா

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்