முகப்பு Bengaluru கர்நாடக மாநில திமுக சார்பில் தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல் விழா சிறப்பாக கொண்டாட்டம்

கர்நாடக மாநில திமுக சார்பில் தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல் விழா சிறப்பாக கொண்டாட்டம்

0

பெங்களூரு, ஜன. 15: கர்நாடக மாநில திமுக சார்பில் தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இது குறித்து கர்நாடக மாநில திமுக அமைப்பாளர் ந.ராமசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: கர்நாடக மாநில திமுக சார்பில் ஞாயிற்றுக்கிழமை தமிழ் புத்தாண்டு பொங்கல் விழா சக்கரை பொங்கல், செங்கரும்பு, தினசரி கேலண்டர்கள் வழங்கி தமிழ்ப் புத்தாண்டு விழா கொண்டாடப்பட்டது.

கர்நாடக மாநில திமுக அலுவலகம், கலைஞரகம் வளாகம், தளபதி மணிவிழா அரங்கத்தில் உள்ள மு.க.ஸ்டாலின் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி, கழகத் தோழர்களுக்கும், பொது மக்களுக்கும் திமுக மகளிர் அணி நிர்வாகிகள், சர்க்கரை பொங்கல் வழங்கியும், மாநில திமுக நிர்வாகிகள் செங்கரும்பு, கட்சியின் தினசரி கேலண்டர்கள் அனைவருக்கும் வழங்கி சிறப்பாக விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில் அக்கட்சியின் மாநில அமைப்பாளர் ந.இராமசாமி, அவைத் தலைவர் மொ.பெரியசாமி, பொருளாளர் தட்சிணாமூர்த்தி, துணைத் தலைவர் ஜி.இராமலிங்கம், இலக்கிய அணித் தலைவர் முருகு ராமலிங்கம், செயலாளர் போர்முரசு கதிரவன், வி.எஸ்.மணி, ஜி.நாகராஜ், எஸ்.ஏழுமலை, சற்குணம், விக்ரம், உட்லண்ட்ஸ் கணேசன், தமிழ்ச்செல்வன், இளங்கோ, சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் என்று கர்நாடக மாநில திமுக அமைப்பாளர் ந.இராமசாமி அதில் தெரிவித்துள்ளார்.

முந்தைய கட்டுரைதிருவள்ளுவரை சிறப்பாக கொண்டாடுவதன் மூலம் தமிழர்கள் தலை நிமிர்ந்து நிர்ப்போம்: பைப்பனஹள்ளி டி.ரமேஷ்
அடுத்த கட்டுரைபெங்களூரில் திருவள்ளுவர் ஜெயந்தி பைப்பனஹள்ளி டி.ரமேஷ் தலைமையில் கோலாகலமாக‌ கொண்டாட்டம்

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்