Bangalore Dinamani

கருநாடகத்தில் திமுக சிறப்பாக செயல்படுகிறது: கிரிராஜன் எம்.பி பாராட்டு

பெங்களூரு, அக். 14: கருநாடகத்தில் திமுக சிறப்பாக செயல்படுகிறது என்று திமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் கிரிராஜன் எம்.பி பாராட்டு தெரிவித்தார்.

திமுகவைச் சேர்ந்த‌ வழக்க‌றிஞர் கிரிராஜன் எம்.பி, கருநாடக மாநில ராமசந்திர புரத்தில் உள்ள தி.மு.க அலுவலகமான கலைஞரகத்திற்கு வியாழக்கிழமை வருகை புரிந்தார். அவரை மாநில அமைப்பாளர் ந.இராமசாமி, முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் கே.எஸ்.சுந்தரேசன்,

இளைஞர் அணி துணை அமைப்பாளர் முருகான‌ந்தம், சத்தீஷ். எம்.ஆர்.பழம்நீ, வேணுகோபால், தனுஷ், இராஜாஜிநகர் சரவணன், மகளீர் அணி அமைப்பாளர் சர்குணா, பாலகிருஷ்ணா மற்றும் பலர் சால்வை அணிவித்து வரவேற்றனர். அலுவலகத்தை பார்வையிட அவர் பின்னர் அனைவருடன் கலந்துரையாடினார்.

இதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில், கருநாடகத்தில் அமைப்பாளர் இராமசாமி தலைமையில் திமுக சிறப்பாக பணியாற்றி வருகிறது. இதனை நாங்கள் ஊடகங்கள் மூலம் தமிழ்நாட்டில் காண முடிகிறது. இதே போன்று தி.மு.க கருநாடகத்தில் சிறப்பாகவும், ஒற்றுமையாகவும் பணியாற்ற வேண்டும். ஒற்றுமையாக பணியாற்றினால்தான் எதிர்காலத்தில் கர்நாடகத்திலும் அரசியல் அதிகாரத்தை பெற முடியும்.

தமிழ்நாட்டில் இதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க செய்துள்ளது. கருநாடகத்திலும் இதனை தி.மு.க செய்யும் என்று எதிர்பார்க்கிறேன். எனவே அனைவரும் ஒற்றிணைந்து கட்சியை கட்டுப்பாட்டுடன் வளர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

Exit mobile version