மங்களூரு, டிச. 3: மங்களூரு விமான நிலையத்தில்சுங்க அதிகாரிகள் ரூ. 4 கோடி மதிப்புள்ள 7,692 கிராம் 24 காரட் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து வெளியிடப்பட்ட செய்தி குறிப்பு: 01.11.2022 முதல் 30.11.2022 வரை துபாயில் இருந்து வந்த விமானங்களிலிருந்து பத்து ஆண் பயணிகளிடம் பரிசோதனை செய்தததில் எல்இடி பல்ப், கைக்கடிகாரம், மொபைல் போன் கீபேட், டிராலி பேக்குகளின் பீடிங், கப்புசினோ தயாரிப்பாளரின் மோட்டாரில் சில்வர் பூசப்பட்ட தட்டுகள், அட்டைப்பெட்டியின் அடுக்குகளுக்குள் பேஸ்ட் / பவுடர் வடிவில், இரட்டை அடுக்கு உடுப்பு (பனியன்), பேக்ஸ் மற்றும் மலக்குடலில் அணியும் உள்ளாடைகள் மற்றும் காலுறைகள் ஆகியவற்றிலிருந்து பல்வேறு முறைகளில் கடத்தப்பட்ட 7,692 கிலோ 24 கேரட் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ. 4,01,18,280 ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.