Bangalore Dinamani

பெங்களூரில் கர்நாடக திமுக சார்பில் தந்தை பெரியாரின் 49 வது நினைவு நாள் நிகழ்ச்சி அனுசரிப்பு

பெங்களூரு, டிச. 25: பெங்களூரில் கர்நாடக திமுக சார்பில் தந்தை பெரியாரின் 49 வது நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இது குறித்து அக்கட்சியின் மாநில அமைப்பாளர் ந.இராமசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: கர்நாடக திமுக சார்பில் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 49 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை,பெங்களூரு இராமசந்திரபுரம் கர்நாடக மாநில திமுக கலைஞரக வளாகம் தளபதி மு.க.ஸ்டாலின் மணிவிழா அரங்கத்தில் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 49 – ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.

தந்தை பெரியார் நினைவு நாளையொட்டி அக்கட்சியின் மாநில அமைப்பாளர் ந.இராமசாமி தலைமையில் அவரது திருஉருவப்படத்திற்கு அவைத்தலைவர் மொ.பெரியசாமி, பொருளாளர் தட்சிணாமூர்த்தி, இளைஞர் அணி செயலாளர் மு.ராஜசேகர், இலக்கிய அணித் தலைவர் போர்முரசு கதிரவன், முன்னாள் நிர்வாகிகள் ஏ.டி.அந்தோணிராஜ், கே.எஸ்.சுந்தரேசன், ஆற்காடு அன்பழகன், ப.மூர்த்தி, எம்.ஆர்.பழம்நீ, சற்குணம், பன்னீர் செல்வம், தொமுச பேரவைச் சேர்ந்த பிரபு, உட்லண்ஸ், மகேஷ்பாபு, இளங்கோ, கோ.கருணாநிதி (ஜிபிஓ), ஜெயபால், ஏ.தங்கராஜ், ஜி.நாகராஜ், விக்ரம், லியோராஜ் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version