Bangalore Dinamani

பெங்களூரில் கர்நாடக திமுக சார்பில் தந்தை பெரியாரின் 50 வது நினைவு நாள் நிகழ்ச்சி

பெங்களூரு, டிச. 20: பெங்களூரில் கர்நாடக திமுக சார்பில் தந்தை பெரியாரின் 50 வது நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இது குறித்து அக்கட்சியின் மாநில அமைப்பாளர் ந.இராமசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: கர்நாடக திமுக சார்பில் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 50 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி திருவள்ளுவர் ஆண்டு 2059, டிச. 25 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, காலை 10.00 மணி அளவில் பெங்களூரு இராமசந்திரபுரம் கர்நாடக மாநில தி.மு.க கலைஞரக வளாகம் தளபதி மு.க.ஸ்டாலின் மணிவிழா அரங்கத்தில் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 50 – ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

தந்தை பெரியார் நினைவு நாளையொட்டி அவரது திருஉருவப்படத்திற்கு மாநில நிர்வாகிகள் மாலை அணிவித்து மலர் தூவி நினைவஞ்சலி செலுத்துவர். இதில் முன்னாள் மாநில நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், இளைஞர் அணி நிர்வாகிகள், இலக்கிய அணி நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள், தொ.மு.ச பேரவை நிர்வாகிகள், கிளைக்கழக நிர்வாகிகள் மற்றும் கழகத் தோழர்கள் அனைவரும் கலந்து கொள்ள கேட்டுக்கொள்கிறேன் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version