Bangalore Dinamani

புதிய அஇஅதிமுக உறுப்பினர் விண்ணப்ப படிவம் வழங்குவது தொடக்கம்

பெங்களூரு, ஏப். 5: புதிய அஇஅதிமுக உறுப்பினர் விண்ணப்ப படிவங்கள் வழங்குவதை கர்நாடக அஇஅதிமுக செயலாளர் முனைவர் எஸ்.டி.குமார் தொடங்கி வைத்தார்.

புதன்கிழமை (ஏப்.5) காலை அஇஅதிமுக பொதுச்செயலாளர் புதிய அஇஅதிமுக உறுப்பினர் விண்ணப்ப படிவம் எம்ஜிஆர் மாளிகை தலைமை கழகத்தில் வழங்கி தொடங்கி வைத்ததார்.

கர்நாடக மாநில அஇஅதிமுக செயலாளர் முனைவர் எஸ்.டி.குமாரிடம், தலைமை கழக நிர்வாகி மகாலிங்கம் புதிய விண்ணப்ப படிவங்கள் பெற்றார். அப்போது மாநில பொருளாளர் வேடியப்பன் உடன் இருந்தார்.

கர்நாடக மாநில அஇஅதிமுக வினர் உறுப்பினர் விண்ணப்ப படிவங்களை முறைப்படி பெற்றுக் கொள்ள நேரடி தொடர்பு கொள்ளவும் எஸ்.டி.குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

Exit mobile version