பெங்களூரு, நவ. 24: திமுகவின் 15 – வது உட்கட்சித் தேர்தல் நிறைவடைந்ததைத் தொடர்ந்து கட்சியின் இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளதை கர்நாடக மாநில திமுக வரவேற்று உள்ளது.
இது தொடர்பாக கர்நாடக மாநில அமைப்பாளர் ந. ராமசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: உலகம் போற்றும் திராவிட இயக்கத்தின் எதிர்காலம் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. முத்தமிழ் அறிஞர் கலைஞரின் பேரனாக இந்தியாவே வியந்து பார்க்கும் சிறப்பான ஆட்சி நடத்தி வரும் தளபதி முகஸ்டாலின் அவர்களின் மகனாக கோடான கோடி திமுக தொண்டர்களின் இதயங்களில் குடி கொண்ட இளைஞரணி செயலாளராக செயல்பட்டு வரும் உதயநிதி ஸ்டாலின் தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா, ஆகியோரின் கொள்கைகளில் மாறாத பற்று கொண்டு பணியாற்றி வருபவர்.
அவர் திமுக இளைஞரணி செயலாளராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இதை கர்நாடக மாநில திமுக சார்பில் வரவேற்கிறோம். இயக்கத்தின் திராவிட எதிர்காலம் தமிழ்நாட்டில் எதிர்காலம் உதயநிதி ஸ்டாலின் தனது பணியை மேலும் சிறப்பாக ஆற்றுவார் என்பதில் எள்ளளவும் மாற்று கருத்து இல்லை அவருக்கு பாராட்டு தெரிவிக்கிறோம் இவ்வாறு கர்நாடக மாநில அமைப்பாளர் ந. ராமசாமி கூறியுள்ளார்.