Bangalore Dinamani

தமிழ்நாட்டின் அமைச்சர் ஆர்.காந்தியின் மைத்துனர் சந்திரசேகர் காலமானார்

பெங்களூரு, அக். 8: தமிழ்நாட்டின் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தியின் மைத்துனர் பெங்களூரைச் சேர்ந்த சந்திரசேகர் காலமானார். அவரது உடலுக்கு கர்நாடக திமுகவினர் அஞ்சலி செலுத்தினர்.

தமிழ்நாட்டின் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் இராணிப்பேட்டை ஆர்.காந்தி அவர்கள் மைத்துனரும், இராணிப்பேட்டை விஸ்வாஸ் பள்ளியின் தலைவர் கமலாகாந்தி அவர்களின் தம்பியுமான, பெங்களூரைச் சேர்ந்த‌ தொழிலதிபர் சந்திரசேகர் அவர்கள் இயற்கை எய்தினார். அவருடைய உடலுக்கு அமைச்சர் காந்தி, கமலாகாந்தி ஆகியோர் மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து முரசொலி செல்வம் சந்திரசேகரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் கர்நாடக‌ மாநில திமுக அமைப்பாளர் ந.இராமசாமி, அவைத்தலைவர் மொ.பெரியசாமி, பொருளாளர் தட்சிணாமூர்த்தி, இலக்கிய அணியைச் சேர்ந்த போர்முரசு கதிரவன், கே சுந்தரேசன், இளைஞர் அணி சேர்ந்த‌ விக்ரம், முருகானந்தன் லியோ, மகளிர் அணி அமைப்பாளர் சற்குணம், ஆற்காடு அன்பழகம், உட்லண்ட்ஸ் கணேசன் உள்ளிட்ட திமுகவினர் அஞ்சலி செலுத்தினர்.

Exit mobile version