Bangalore Dinamani

கர்நாடக மாநில திமுக சார்பில் தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல் விழா

பெங்களூரு, ஜன. 13: கர்நாடக மாநில திமுக அமைப்பாளர் ந.ராமசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: கர்நாடக மாநில திமுக சார்பில் தமிழ் புத்தாண்டு பொங்கல் விழா சக்கரை பொங்கல், செங்கரும்பு, தினசரி கேலண்டர்கள் வழங்கி விழா கொண்டாடப்படுகிறது. கர்நாடக மாநில திமுக சார்பில் தமிழ் புத்தாண்டு, பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை (ஜன.15) கொண்டாடப்படுகிறது.

காலை 9.00 மணிக்கு மாநில திமுக அலுவலகம், கலைஞரகம் வளாகம், தளபதி மணிவிழா அரங்கத்தில் உள்ள மு.க.ஸ்டாலின் அரங்கத்தில், திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி, கழகத் தோழர்களுக்கும், பொது மக்களுக்கும் திமுக மகளிர் அணி நிர்வாகிகள், சர்க்கரை பொங்கல் வழங்கியும், மாநில திமுக நிர்வாகிகள் செங்கரும்பு, கட்சியின் தினசரி கேலண்டர்கள் அனைவருக்கும் வழங்கி சிறப்பாக விழா நடைபெறும்.

விழாவில் கழகத்தின் அனைத்து துணை அமைப்பு நிர்வாகிகளும், கழக தோழர்களும், பொது மக்களும் கலந்து கொண்டு தமிழ் புத்தாண்டு, பொங்கல் விழாவை சிறப்பிக் வேண்டி கொள்கிறேன். கேட்டுக் இவ்வாறு கர்நாடக மாநில திமுக அமைப்பாளர் ந.இராமசாமி அதில் தெரிவித்துள்ளார் .

Exit mobile version