Bangalore Dinamani

கர்நாடக மாநில அஇஅதிமுக கட்சியினருக்கு முக்கிய அறிவிப்பு

பெங்களூரு, மார்ச் 15: எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை ஏற்றுக்கொண்டு அஇஅதிமுக உறுப்பினராக உறுதியுடன் இருப்பேன் என்ற தோழர்கள் அனைவருக்கும் உறுப்பினர் கார்டுகள் வழங்கப்படும் என்று கர்நாடக மாநில அஇஅதிமுக செயலாளர் முனைவர் எஸ்.டி.குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கர்நாடக மாநில அஇஅதிமுக செயலாளர் முனைவர் எஸ்.டி.குமார் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை: இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை ஏற்றுக்கொண்டு அஇஅதிமுக உறுப்பினராக உறுதியுடன் இருப்பேன் என்ற தோழர்கள் அனைவருக்கும் உறுப்பினர் கார்டுகள் வழங்கப்படும்.

ஏற்கனவே உறுப்பினராக உள்ளவர்களுக்கும் இது பொருந்தும். பழைய உறுப்பினர்களை புதுப்பிக்கும் அடையாள அட்டை கர்நாடக மாநில அஇஅதிமுக செயலாளர் முனைவர் எஸ்.டி.குமார் அவர்களிடம் தலைமை ஒப்படைத்துள்ளது. எனவே இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடியாரை தலைமையாக ஏற்று கொள்பவர்கள் மட்டும் உறுப்பினர் அடையாள அட்டை பெற தகுதி பெற்றவர்கள் என்பதை தெளிவாக தெரிவித்து கொள்கிறேன்.

அஇஅதிமுகவினராக அங்கிகரிக்க படுவீர்கள் என்பதையும் தெளிவுபடுத்துகிறேன். மேலும், எப்போது, எந்த இடத்தில் கர்நாடக மாநிலத்தில் உறுப்பினர் அட்டைகள் வழங்கப்படும் என்பதை விரைவில் தெரிவிக்கப்படும். புதிய உறுப்பினர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் தலைமை அறிவிப்புக்கு பிறகு தெரிவிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு கர்நாடக மாநில அஇஅதிமுக செயலாளர் முனைவர் எஸ்.டி.குமாரை தொடர்பு கொள்ளவும் 9343765448 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version