பெங்களூரு, ஏப். 15: கர்நாடக அஇஅதிமுக சார்பில் தமிழ் புத்தாண்டு தினம், அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை (ஏப். 14) பெங்களூரு சிவாஜி நகர் கட்சி அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு கர்நாடக மாநில அஇஅதிமுக செயலாளர் முனைவர் எஸ்.டி.குமார், கொண்டாட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவங்கள் பெறும் நிகழ்ச்சி:
சிவாஜி நகர் கட்சி அலுவலகத்தில் பூர்த்தி செய்யப்பட்ட அஇஅதிமுக உறுப்பினர் விண்ணப்ப படிவங்களை இன்று ஏராளமான அஇஅதிமுகவினர் கர்நாடக மாநில அஇஅதிமுக செயலாளர் முனைவர் எஸ். டி. குமாரிடம் வழங்கினர்.
கோடைக்கால வெய்யிலை தணிக்க கனிகள்:
கர்நாடக மாநில அஇஅதிமுக வினர் மாநில அவைத்தலைவர் அன்பரசன், தலைமையில், மாநில இணைச் செயலாளர் சந்திரிகா கிழக்கு மாவட்ட செயலாளர் நடராஜ், முன்னிலையில் கோடைகால வெய்யிலை தணிக்க மக்களுக்கு கர்நாடக மாநில அஇஅதிமுக செயலாளர் முனைவர் எஸ்.டி.குமார் டானரி ரோடு சதுக்கத்தில் வெள்ளிக்கிழமை கனிகள் வழங்கினார். நிகழ்ச்சியில் அக்கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
அம்பேத்கர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை:
பெரியார் நகர் சதுக்கத்தில் உள்ள அண்ணல் அம்பேத்கர் திருவுருவச் சிலைக்கு மாநில அஇஅதிமுக அவைத்தலைவர் அன்பரசன் தலைமையில் மாநில இணைச் செயலாளர் சந்திரிகா கிழக்கு மாவட்ட செயலாளர் நடராஜ் முன்னிலையில் கர்நாடக மாநில அஇஅதிமுக செயலாளர் முனைவர் எஸ்.டி.குமார் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செய்தார். உடன் அக்கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள்.